ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 5
சங்க இலக்கியத்தின் பெருமைகள்
சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள "மங்கள வாழ்த்து" என்கிற பாடலை இளங்கோவடிகள் பின்வருமாறு எழுதியுள்ளார்.
"பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
...
திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும்
...
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்"
சங்க இலக்கியத்தில் எங்கயாவது ஒருத்தன் சாமியை போற்றிருக்கானா ? வாழ்ந்த நகரத்தைப் பற்றி பெருமையாக எழுதி இருக்கிறார்கள்.
சங்க இலக்கியத்துல 52 இடத்துல உவமை வருது "இவள் தொண்டி என்ன" தொண்டிங்கிற நகரத்தை மாதிரி அழகா இருக்கா! இவள் முசிரியை போல அழகா இருக்கா! இவளுடைய நெற்றி இந்த நகரத்தினுடைய மாதிரி அழகா இருக்கு. இப்ப நீங்க திடீர்னு போய் ஒரு பொம்பளை பிள்ளையை போய் பார்த்து பாண்டி பஜார் மாதிரி அழகா இருக்கா அப்படின்னு சொன்னா அடிக்க வந்துருவான்.
ஒருத்தனுடைய உடலில் உள்ளத்தில் அவனுடைய நாளங்களில் ரத்தத்தில் நகர நாகரிகம் எவ்வளவு ஆழமாக ஊறிப்போய் இருந்தால் ஒரு பெண்ணினுடைய அழகை வர்ணிக்கும் போது ஒரு நகரத்தின் நினைவு ஒருவனுக்கு வரும். அப்படிப்பட்ட ஒரு நாகரிகம் இந்தியாவினுடைய முதல் நகர்மைய இலக்கியம் சங்க இலக்கியம்.
The First Urban Literature of India is Sangam Literature. The First Ocean Knowing Literature.
கடலை முழுவதுமாக அறிந்த ஒரு இலக்கியம் சங்க இலக்கியம்! தாயை தெய்வமாக வணங்கிய இலக்கியம் சங்க இலக்கியம்! திணைக் கோட்பாட்டை கொண்ட இலக்கியம் சங்க இலக்கியம்! வெளிநாட்டு வணிகத்தை அறிந்த இலக்கியம் சங்க இலக்கியம்! அப்ப இதெல்லாம் tally பண்ணி பார்த்தீங்கன்னா சிந்துவெளி பண்பாடு என்பது ஒரு வன்பொருள் it's Hardware, "Indus Hardware". சங்க இலக்கியம் தான் அதன் மென்பொருள் "Indus Software". சங்க இலக்கியம் என்பது சிந்துவெளி என்ற வன்பொருளின் மென்பொருள்.
சங்க இலக்கியத்தை வந்து நீங்க ஒற்றை வரியில ஏதோ ஒரு பத்திரிகை நிருபர் எல்லாம் எழுதி புலவர் எல்லாம் கூடி இன்னைக்கு மார்னிங் என்ன பார்த்த, ஈவினிங் என்ன பார்த்த கவிதையா எழுதிட்டு வான்னு எழுதல, பாரி ஓரி காரின்னு ஏழு கடை ஏழு வள்ளல் இருந்தான்னா அந்த ஏழு பேருமே சாதாரண மலைநில மன்னர்கள். அதுல சேரனும் கிடையாது, பாண்டியன் கிடையாது சோழன் கிடையாது.
நான் பைனான்ஸ் பண்றேன், சங்க இலக்கியத்தின் பாண்டியன் சொல்லி என்னை எட்டாவது ஆளா சேர்த்துக்கோன்னா சேர்க்க முடியாது. ஏன்னா தமிழ் தொன்மங்கள் அவ்வளவு ஆழமானது! கடையேழு வள்ளல்ன்னா கடையேழு வள்ளல் தான். அந்த ஏழு பேருமே சாதாரண மலைநிலத் தலைவன் தான். பேரரசர் இல்லை! ஆனால் பேரரசின் உருவாக்கத்திற்கு முன்னால் தமிழ் தொன்மங்கள் இருக்கிறது, வணிகம் போற்றப்படுகிறது, பொருள் போற்றப்படுகிறது , வெளிநாட்டு வணிகம் போற்றப்படுகிறது. ஆக எப்படி பார்த்தாலும் கவரிமான் பேசப்படுகிறது, கவரிமான் என்ன சாப்பிடும், எங்க இருக்கும், அது எப்படி என்ன மரத்துக்கு கீழே விழுகும். சிங்கம் நர்மதை நதியைத் தாண்டி தெற்கே வந்ததே இல்லை. ஆனால் சிங்கத்தினுடைய அனாட்டமியை சங்க இலக்கியம் பேசியது போல இந்தியாவில் வேற எந்த இலக்கியமும் பேசவில்லை. கவரிமான் உணவு பழக்கத்தை வேற எந்த இலக்கியமும் பேசவில்லை. ஒட்டகம் எலும்பு தின்னும் என்பதை சங்க இலக்கியம் மட்டும்தான் பதிவு செய்கிறது. ஆனால் ஒட்டகம் தமிழ்நாட்டில் இல்லை.
முடிவுரை
“கட்டுகதைகள் வரலாறானால்
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்கிற பாகுபாடு எதற்கு ?
கற்பனைக்கு தேவையில்லை கரிமக்கணக்கு
ஆனால் உண்மைக்கு தேவை எப்போதும் ஓர் உரைகல்
தரவுகள் போன்ற ஊக்கம் வேறில்லை
புரிதலை போன்ற ஆக்கம் வேறு ஒன்றுமில்லை
உண்மை வரலாறு யாரும் யாருக்கும் எழுதும் உயில் அல்ல உரிமை
வரலாறு என்பது ஒரு உரிமை
வரலாறு என்பது சலுகை அல்ல”
“இந்தியா ஒரு உருக்குப்பானை அல்ல
India is not a melting pot”
உருக்கு பானை என்பது பல உலோகங்களின் கூட்டணியில் ஒரு உலோகம் உருவாக்கப்பட்டு பல தனித்துவம் வாய்ந்த உலோகங்கள் அழிக்கப்பட்டு உருவாவது. அது போல ஆதிக்க சாதிகளின் கூட்டணியில் வலுவற்ற சாதியினரை அழித்து உருவாகும் சமுதாயம் இந்தியாவின் அடையாளம் அல்ல.
"India is not a salad bowl"
மேற்கத்திய கலாச்சார உணவான இலையமுது கிச்சடி கிண்ணத்தில் ( Salad Bowl ) நாகரீகம் கருதி குறிப்பிட்ட சில காய்கறிகளே இடம்பெரும். மாறாக, இந்தியா என்பது அனைத்து வகையான காய்கறிகளையும் உள்ளடக்கிய கலவையாக விளங்குவதே இந்தியாவின் பன்முகத்தன்மையின் அடையாளமாகும்.
இந்தியா என்பது அற்பமான மேற்கத்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நாடல்ல என்கிற தெளிவு நம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
நன்றி வணக்கம்.