ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 2
சிந்துவெளியின் சிறப்பம்சங்கள்
சிந்து சமவெளி நாகரிகம் 13 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட நிலத்தை கொண்டது என்று கண்டுபிடித்து உள்ளார்கள். ஆப்கானிஸ்தானிலிருந்து ஆரம்பித்து யமுனை வரை பாகிஸ்தானுக்கு வடமேற்கில் உள்ள ஸ்வாட் பகுதியில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள தைமாபாத் வரை பரந்து விரிந்துள்ளது.
இது ஒரு ஆரிய பண்பாடு இது ஒரு வேத பண்பாடுன்னா குதிரை இல்லாத வேதமாயா ?குதிரை இல்லாத ஆரியரா ? நீ வரும்போதே குதிரையோட தானே வந்த இங்க எங்க குதிரை இருக்கு ? அப்படின்னு நம்ம ஆளுங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சோம்! அங்க வந்து காளமாடு இருக்கு ! கம்பீரமான காளமாடு இருக்கு ! எருமை மாடு இருக்கு !சிந்துவெளியில் இருந்தவங்க சுமேரியாவுக்கு எருமையை ஏற்றுமதி பண்றாங்க. எருமையை பழக்கின நாடு இது. சிந்துவெளி அவ்வளவு பெரிய ஒரு நாகரிகம் ரைனோசரஸ் இருக்கு, காண்டாமிருகம் இருக்கு, புலி இருக்கு ஆனா சிங்கம் இல்ல! குதிரை இல்ல !! காட்டு கழுதை இருக்கு ! ஆனா குதிரை இல்லை !
அசோகர் மரத்தை நட்டார் சாவடியை நட்டார் புத்த மதத்தை பரப்பினார் பொண்ணையும் மகனையும் இலங்கைக்கு அனுப்பினார் எல்லாம் படிக்கிறோம் ஆனா உங்களுக்கு தெரியுமா ஒரு 200 வருஷத்துக்கு முன்னால வரைக்கும் அசோகர்னு ஒரு ஆளு இந்த நாட்டுல வாழ்ந்தார்னே அப்படி ஒரு மன்னர் இருந்தாருன்னே யாருக்கும் தெரியாது.
ஜேம்ஸ் பிரின்சப்னு (James Prinsep) ஒரு வெளிநாட்டுக்காரர் வராம இருந்தா அசோகர்னு ஒரு ஆளு இங்க இருந்தாருங்கிறதே அமுக்கி இருப்பாங்க.
திராவிட மொழி குடும்பம் என்று ஒன்று இருப்பதை பிராகுயி மொழியிலிருந்து வடக்கில் இருக்கக்கூடிய மொழிகளை எல்லாம் தொட்டு திராவிட மொழி குடும்பம் என்ற கருத்தியலை எல்லி சொன்னாரு அதுக்கு பின்னால் இதை ஆணித்தரமாக முன்வைத்தது கால்டுவெல். அதனால "அவர்களுக்கு" கால்டுவெல் பிடிக்காது, பிரின்ஸ் பிடிக்காது.
பீகார் அருங்காட்சியகம் ரொம்ப நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டோம்
அங்கு சாணக்யா படத்தை பெரிதாக வரையப்பட்டு அதற்கு அருகில் சிறியதாக சந்திரகுப்த மௌரியரின் படத்தை வரைந்திருந்தார்கள் அதைக் கண்டு பின்வருமாறு கேள்வி கேட்டேன்.
சந்திரகுப்த மௌரியரை நீங்க கொண்டாடுறீங்களான்னு கேட்டேன். உடனே அவர் சொல்றாரு, சார் அந்த சந்திரகுப்த மௌரியரை கொண்டாட இப்பதான் இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சென்ற ஐந்து ஆறு வருடங்களாக சந்திரகுப்த மௌரியர் ஜெயந்தின்னு ஒன்னு கொண்டாடுறாங்க. அப்படின்னு சொல்லிட்டு அதோட சேர்த்து சொன்னாரு அந்த பங்க்ஷன் சார் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த எம்எல்ஏ மந்திரிங்க மட்டும்தான் சார் போவாங்க மத்த மந்திரிங்க எல்லாம் போகமாட்டாங்க சார். ஏனென்றால் இந்த சந்திரகுப்த மௌரியர் ஒரு தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர். அவர் முறா (Mura) என்ற அவருடைய அம்மாவினுடைய பெயரிலிருந்து மவுரியா (Maurya) என்கிற ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.
சந்திரகுப்த மௌரியரின் பற்றிய பின்னணியை தெரிந்து கொள்வோம்.
செலூகஸ் நிகேட்டர் (Seleucus I Nicator) என்பவர் அலெக்சாண்டர் பேரரசின் பிரதான படைத்தளபதிகளில் ஒருவர் மற்றும் அவரது முக்கியமான வாரிசுகளில் ஒருவர். அவர் செலூசிட் பேரரசை நிறுவினார். இது மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. அவர் சந்திரகுப்த மௌரியர் (Mauryan Empire) உடன் மோதினார். பின்னர் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் படி, அவர் சந்திரகுப்தருக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளை விட்டுக்கொடுத்தார் மற்றும் 500 போர் யானைகளைப் பெற்றார். இந்த ஒப்பந்தம் இந்தோ-கிரேக்க உறவுகளின் தொடக்கமாக கருதப்படுகிறது
சில வரலாற்று குறிப்புகளின்படி, செலூகஸ் தனது மகளை (ஒருவேளை ஹெலினா என்று பெயர்) சந்திரகுப்தருக்கு மணமுடித்துக் கொடுத்தார். இந்த திருமண உறவு, மௌரிய பேரரசு மற்றும் செலூசிட் பேரரசு இடையேயான இராஜதந்திர உறவை வலுப்படுத்தியது.
பாலகிருஷ்ணனின் உரை தொடர்கிறது
ஏன் சாணக்கியரைப் பற்றிய கேள்வி வறலாற்றுப்பதிவில் எங்கேயுமே கிடையாது. இது ஒரு வரலாற்று கதாபாத்திரம் கூட கிடையாது. அர்த்தசாஸ்திரம் அப்படியே ஊதி ஊதி பெருக்கி சினிமாவாக மாற்றி இப்ப கடைசியா சாணக்கியா சீரியல் என்று அந்த கதாப்பாத்திரத்தை அப்படியே ஊதி ஊதி பெருக்கி விட்டார்கள்.
ஒருவர் ஜெயிச்சு வந்ததுக்கே மூளையா இருந்தவர் ஒருத்தர், அவர் மூளைதான் பெரிய மூளை. ஒருத்தன் ஜெயிச்சான்னா உண்மையிலே ஜெயிச்சவனை பாராட்டணும். ஜெயிச்சவனுக்கு பக்கத்துல இன்னொரு கேரக்டர் கிரியேட் பண்ணி இவர் சொல்லிதான் எல்லாம் ஜெயிச்சாரு என்று பூசி முழுகிறார்கள்.
Post a Comment