ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 4
சிந்து வெளி நாகரிகத்தின் சிறப்பம்சங்கள்
எகிப்திய நாகரிகத்தின் மீது அவ்வளவு மரியாதை கிடையாது. எகிப்திய நாகரிகம் ஒரு ராஜாவை புதைக்கிறதுக்கு அவரை பாடம் பண்ணி புதைச்சு அவர் கூட அடிமைகளை புதைச்சு பெண்களையும் புதைச்சு அவர் செலவழிக்கிறதுக்கு வைரம் வைடூரியம் அவர் செத்த பிறகு செலவழிக்கிறதுக்கு பணம் வைத்திருந்தது. எகிப்திய நாகரிகத்தில் அடிமைகளை காணலாம். சுமேரிய நாகரீகம் முழுவதும் கோயில்களே ஆக்கிரமித்திருந்தன. ஆனால் சிந்துவெளி நாகரிகத்தில் கோயில்கள் இல்லை, பிரமிடுகள் இல்லை! ஆனால் குப்பைத் தொட்டிகள் இருந்தன. வடிகால்கள் இருந்தன. 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவன் வடிகால் அமைத்திருந்தான் என்பதுதான் பெருமை. ஒருவன் குளியலுக்காக பெரும் குளியல் இடம் ஒதுக்கியிருந்தான். குளிப்பதற்கு ஓர் இடம், உடை மாற்றுவதற்கு ஓர் இடம் என்று படிக்கட்டு தரையில அமைத்து Anti sliding skid ஆகாம இருப்பதற்கு Anti skidding மாதிரி சொரசொரன்னு போட்டிருக்கான். அந்த ஒரு ஒரு கல்லுக்கும் செங்கலுக்கும் இன்னொன்னுக்கும் நடுவுல இருக்கிற பகுதியில தார் பூசி இருக்கான். Bitumen அப்படின்னு சொல்ற இந்த தாரை 5000 வருஷத்துக்கு முன்னால Water leak proof என்று ஒரே ஒரு குளிக்கிற இடம் இந்த உலகத்தில் இருந்தது என்றால் அது சிந்துவெளி நாகரிகத்தில் தான் இருந்தது.
கடல் தெரியாத ஒருவன் சிந்துவெளி நாகரிகத்தை கட்டமைத்திருக்கவே முடியாது. கடல் யாருக்கு தெரியும் இந்த இந்திய துணைக்கண்ட இலக்கியத்தில் கடலைப் பற்றி அதிகமாக பேசுகிற ஒரே இலக்கியம் சங்க இலக்கியம். நகரத்தை பற்றி அதிகமாக பேசுகிற ஒரே இலக்கியம் சங்கத் தொல்லியல் இலக்கியங்கள்.
சிந்துவெளியில கிடைக்கிற பகடை கனசதுர பகடை (Cubical Dice). இங்க கீழடியில் கிடைச்சிருக்கிற பகடையும் கனசதுர பகடை . கனசதுர பகடையில வந்து எப்படின்னு கேட்டீங்கன்னா ஆறு சைடும் டாட் போட்டிருக்கும் சங்க இலக்கியத்துல கலித்தொகையில வந்து “பத்துருவன் பெற்றான் மனம் போல நந்தியால்” அப்படின்னு ஒரு உவமை வரும். அதாவது அவனுடைய மகிழ்ச்சி எவ்வளவு கரைபுரண்டு ஓடுதுன்னா சின்ன நம்பர் விழுந்தா மகிழ்ச்சி கம்மியா இருக்கு, அவன் கேட்ட நம்பர் கிடைக்கவே இல்லைன்னா அவன் காதலனுக்காக வெயிட் பண்றவருடைய மனநிலை, அவன் காதலன் நினைச்ச உடனே வந்துட்டதுனால அவனுடைய மனசு எவ்வளவு ஹாப்பியா இருந்ததுன்னா பத்தாம் நம்பர் கிடைச்சா, பகடை விளையாடும்போது பத்தாம் நம்பர் கிடைச்சா எவ்வளவு சந்தோஷமா இருக்குமோ அந்த மாதிரி சந்தோஷம் அவனுடைய காதலன் வந்ததுன்னு சங்க இலக்கியத்தில் எழுதுறான். இந்த பத்தாம் நம்பர் வந்து செவ்வக பகடையில கிடைக்காது, அதுல நாலு பக்கம் தான் இருக்கும் அதிகபட்சம் எட்டு நம்பர் தான் விழுகும். பத்தாம் நம்பர் கிடைக்கிறதா இருந்தா அது ஒரு கனசதுர பகடையா இருக்கும்னு நான் என் புக்ல எழுதுறேன்.
'மகாபாரதம்' நடைபெற்றதாக கூறப்பட்ட எந்த ஒரு வடக்கிந்திய பகுதியிலும் ஒரு பகடை கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
Post a Comment