Saturday, May 31, 2025

ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 5
 
சங்க இலக்கியத்தின் பெருமைகள்
 
சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள "மங்கள வாழ்த்து" என்கிற பாடலை இளங்கோவடிகள் பின்வருமாறு எழுதியுள்ளார்.
"பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
...
திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும்
...
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்"
 
சங்க இலக்கியத்தில் எங்கயாவது ஒருத்தன் சாமியை போற்றிருக்கானா ? வாழ்ந்த நகரத்தைப் பற்றி பெருமையாக எழுதி இருக்கிறார்கள்.
 
சங்க இலக்கியத்துல 52 இடத்துல உவமை வருது "இவள் தொண்டி என்ன" தொண்டிங்கிற நகரத்தை மாதிரி அழகா இருக்கா! இவள் முசிரியை போல அழகா இருக்கா! இவளுடைய நெற்றி இந்த நகரத்தினுடைய மாதிரி அழகா இருக்கு. இப்ப நீங்க திடீர்னு போய் ஒரு பொம்பளை பிள்ளையை போய் பார்த்து பாண்டி பஜார் மாதிரி அழகா இருக்கா அப்படின்னு சொன்னா அடிக்க வந்துருவான்.
 
ஒருத்தனுடைய உடலில் உள்ளத்தில் அவனுடைய நாளங்களில் ரத்தத்தில் நகர நாகரிகம் எவ்வளவு ஆழமாக ஊறிப்போய் இருந்தால் ஒரு பெண்ணினுடைய அழகை வர்ணிக்கும் போது ஒரு நகரத்தின் நினைவு ஒருவனுக்கு வரும். அப்படிப்பட்ட ஒரு நாகரிகம் இந்தியாவினுடைய முதல் நகர்மைய இலக்கியம் சங்க இலக்கியம்.
 
The First Urban Literature of India is Sangam Literature. The First Ocean Knowing Literature.
 
கடலை முழுவதுமாக அறிந்த ஒரு இலக்கியம் சங்க இலக்கியம்! தாயை தெய்வமாக வணங்கிய இலக்கியம் சங்க இலக்கியம்! திணைக் கோட்பாட்டை கொண்ட இலக்கியம் சங்க இலக்கியம்! வெளிநாட்டு வணிகத்தை அறிந்த இலக்கியம் சங்க இலக்கியம்! அப்ப இதெல்லாம் tally பண்ணி பார்த்தீங்கன்னா சிந்துவெளி பண்பாடு என்பது ஒரு வன்பொருள் it's Hardware, "Indus Hardware". சங்க இலக்கியம் தான் அதன் மென்பொருள் "Indus Software". சங்க இலக்கியம் என்பது சிந்துவெளி என்ற வன்பொருளின் மென்பொருள்.
 
சங்க இலக்கியத்தை வந்து நீங்க ஒற்றை வரியில ஏதோ ஒரு பத்திரிகை நிருபர் எல்லாம் எழுதி புலவர் எல்லாம் கூடி இன்னைக்கு மார்னிங் என்ன பார்த்த, ஈவினிங் என்ன பார்த்த கவிதையா எழுதிட்டு வான்னு எழுதல, பாரி ஓரி காரின்னு ஏழு கடை ஏழு வள்ளல் இருந்தான்னா அந்த ஏழு பேருமே சாதாரண மலைநில மன்னர்கள். அதுல சேரனும் கிடையாது, பாண்டியன் கிடையாது சோழன் கிடையாது.
 
நான் பைனான்ஸ் பண்றேன், சங்க இலக்கியத்தின் பாண்டியன் சொல்லி என்னை எட்டாவது ஆளா சேர்த்துக்கோன்னா சேர்க்க முடியாது. ஏன்னா தமிழ் தொன்மங்கள் அவ்வளவு ஆழமானது! கடையேழு வள்ளல்ன்னா கடையேழு வள்ளல் தான். அந்த ஏழு பேருமே சாதாரண மலைநிலத் தலைவன் தான். பேரரசர் இல்லை! ஆனால் பேரரசின் உருவாக்கத்திற்கு முன்னால் தமிழ் தொன்மங்கள் இருக்கிறது, வணிகம் போற்றப்படுகிறது, பொருள் போற்றப்படுகிறது , வெளிநாட்டு வணிகம் போற்றப்படுகிறது. ஆக எப்படி பார்த்தாலும் கவரிமான் பேசப்படுகிறது, கவரிமான் என்ன சாப்பிடும், எங்க இருக்கும், அது எப்படி என்ன மரத்துக்கு கீழே விழுகும். சிங்கம் நர்மதை நதியைத் தாண்டி தெற்கே வந்ததே இல்லை. ஆனால் சிங்கத்தினுடைய அனாட்டமியை சங்க இலக்கியம் பேசியது போல இந்தியாவில் வேற எந்த இலக்கியமும் பேசவில்லை. கவரிமான் உணவு பழக்கத்தை வேற எந்த இலக்கியமும் பேசவில்லை. ஒட்டகம் எலும்பு தின்னும் என்பதை சங்க இலக்கியம் மட்டும்தான் பதிவு செய்கிறது. ஆனால் ஒட்டகம் தமிழ்நாட்டில் இல்லை.
 
முடிவுரை
 
“கட்டுகதைகள் வரலாறானால்
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்கிற பாகுபாடு எதற்கு ?
கற்பனைக்கு தேவையில்லை கரிமக்கணக்கு
ஆனால் உண்மைக்கு தேவை எப்போதும் ஓர் உரைகல்
தரவுகள் போன்ற ஊக்கம் வேறில்லை
புரிதலை போன்ற ஆக்கம் வேறு ஒன்றுமில்லை
உண்மை வரலாறு யாரும் யாருக்கும் எழுதும் உயில் அல்ல உரிமை
வரலாறு என்பது ஒரு உரிமை
வரலாறு என்பது சலுகை அல்ல”
 
“இந்தியா ஒரு உருக்குப்பானை அல்ல
India is not a melting pot”
 
உருக்கு பானை என்பது பல உலோகங்களின் கூட்டணியில் ஒரு உலோகம் உருவாக்கப்பட்டு பல தனித்துவம் வாய்ந்த உலோகங்கள் அழிக்கப்பட்டு உருவாவது. அது போல ஆதிக்க சாதிகளின் கூட்டணியில் வலுவற்ற சாதியினரை அழித்து உருவாகும் சமுதாயம் இந்தியாவின் அடையாளம் அல்ல.
 
"India is not a salad bowl"
 
மேற்கத்திய கலாச்சார உணவான இலையமுது கிச்சடி கிண்ணத்தில் ( Salad Bowl ) நாகரீகம் கருதி குறிப்பிட்ட சில காய்கறிகளே இடம்பெரும். மாறாக, இந்தியா என்பது அனைத்து வகையான காய்கறிகளையும் உள்ளடக்கிய கலவையாக விளங்குவதே இந்தியாவின் பன்முகத்தன்மையின் அடையாளமாகும்.
 
இந்தியா என்பது அற்பமான மேற்கத்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நாடல்ல என்கிற தெளிவு நம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
 
நன்றி வணக்கம்.
 

ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 4
 
சிந்து வெளி நாகரிகத்தின் சிறப்பம்சங்கள்
 
எகிப்திய நாகரிகத்தின் மீது அவ்வளவு மரியாதை கிடையாது. எகிப்திய நாகரிகம் ஒரு ராஜாவை புதைக்கிறதுக்கு அவரை பாடம் பண்ணி புதைச்சு அவர் கூட அடிமைகளை புதைச்சு பெண்களையும் புதைச்சு அவர் செலவழிக்கிறதுக்கு வைரம் வைடூரியம் அவர் செத்த பிறகு செலவழிக்கிறதுக்கு பணம் வைத்திருந்தது. எகிப்திய நாகரிகத்தில் அடிமைகளை காணலாம். சுமேரிய நாகரீகம் முழுவதும் கோயில்களே ஆக்கிரமித்திருந்தன. ஆனால் சிந்துவெளி நாகரிகத்தில் கோயில்கள் இல்லை, பிரமிடுகள் இல்லை! ஆனால் குப்பைத் தொட்டிகள் இருந்தன. வடிகால்கள் இருந்தன. 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவன் வடிகால் அமைத்திருந்தான் என்பதுதான் பெருமை. ஒருவன் குளியலுக்காக பெரும் குளியல் இடம் ஒதுக்கியிருந்தான். குளிப்பதற்கு ஓர் இடம், உடை மாற்றுவதற்கு ஓர் இடம் என்று படிக்கட்டு தரையில அமைத்து Anti sliding skid ஆகாம இருப்பதற்கு Anti skidding மாதிரி சொரசொரன்னு போட்டிருக்கான். அந்த ஒரு ஒரு கல்லுக்கும் செங்கலுக்கும் இன்னொன்னுக்கும் நடுவுல இருக்கிற பகுதியில தார் பூசி இருக்கான். Bitumen அப்படின்னு சொல்ற இந்த தாரை 5000 வருஷத்துக்கு முன்னால Water leak proof என்று ஒரே ஒரு குளிக்கிற இடம் இந்த உலகத்தில் இருந்தது என்றால் அது சிந்துவெளி நாகரிகத்தில் தான் இருந்தது.
 
கடல் தெரியாத ஒருவன் சிந்துவெளி நாகரிகத்தை கட்டமைத்திருக்கவே முடியாது. கடல் யாருக்கு தெரியும் இந்த இந்திய துணைக்கண்ட இலக்கியத்தில் கடலைப் பற்றி அதிகமாக பேசுகிற ஒரே இலக்கியம் சங்க இலக்கியம். நகரத்தை பற்றி அதிகமாக பேசுகிற ஒரே இலக்கியம் சங்கத் தொல்லியல் இலக்கியங்கள்.
 
சிந்துவெளியில கிடைக்கிற பகடை கனசதுர பகடை (Cubical Dice). இங்க கீழடியில் கிடைச்சிருக்கிற பகடையும் கனசதுர பகடை . கனசதுர பகடையில வந்து எப்படின்னு கேட்டீங்கன்னா ஆறு சைடும் டாட் போட்டிருக்கும் சங்க இலக்கியத்துல கலித்தொகையில வந்து “பத்துருவன் பெற்றான் மனம் போல நந்தியால்” அப்படின்னு ஒரு உவமை வரும். அதாவது அவனுடைய மகிழ்ச்சி எவ்வளவு கரைபுரண்டு ஓடுதுன்னா சின்ன நம்பர் விழுந்தா மகிழ்ச்சி கம்மியா இருக்கு, அவன் கேட்ட நம்பர் கிடைக்கவே இல்லைன்னா அவன் காதலனுக்காக வெயிட் பண்றவருடைய மனநிலை, அவன் காதலன் நினைச்ச உடனே வந்துட்டதுனால அவனுடைய மனசு எவ்வளவு ஹாப்பியா இருந்ததுன்னா பத்தாம் நம்பர் கிடைச்சா, பகடை விளையாடும்போது பத்தாம் நம்பர் கிடைச்சா எவ்வளவு சந்தோஷமா இருக்குமோ அந்த மாதிரி சந்தோஷம் அவனுடைய காதலன் வந்ததுன்னு சங்க இலக்கியத்தில் எழுதுறான். இந்த பத்தாம் நம்பர் வந்து செவ்வக பகடையில கிடைக்காது, அதுல நாலு பக்கம் தான் இருக்கும் அதிகபட்சம் எட்டு நம்பர் தான் விழுகும். பத்தாம் நம்பர் கிடைக்கிறதா இருந்தா அது ஒரு கனசதுர பகடையா இருக்கும்னு நான் என் புக்ல எழுதுறேன்.
 
'மகாபாரதம்' நடைபெற்றதாக கூறப்பட்ட எந்த ஒரு வடக்கிந்திய பகுதியிலும் ஒரு பகடை கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
 
 

ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 3
 
வரலாறும் பயணமும்

தமிழ்நாட்டுல 14 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுல பஞ்சம் புழைக்கிறதுக்காக ஆயிரக்கணக்கான பேர் உலகம் ஃபுல்லா கொண்டு போய் விட்டிருக்காங்க. ஒப்பந்த கூலியும் அடிமை முறையில அடிமை வணிகம் நடந்திருக்கு. தமிழ்நாட்டுல இருந்து அங்க போகும்போது அடிமைகளா போனப்ப அவங்களோடு சேர்ந்து போன சாமி யாரு ? பிரசன்ன வெங்கடாஜலபதியா ரங்கநாதரா? இல்லை!முனியாண்டி, மாரியம்மா, காளியம்மா, அங்காள பரமேஸ்வரி இப்படியாதான் போயிருக்காங்க.
 
வரலாறு என்பது வந்த வழி !
பயணங்களின் கூட்டுத்தொகை தான் மனிதர்களின் வரலாறு !!
 
இந்த வரலாற்றுக்கான ஆபத்து ஒரே ஒரு முனையிலிருந்து வருவதாக நான் நினைக்கவில்லை. வரலாற்றுக்கு ஒரு ஆபத்து இருக்குன்னு சொன்னா அந்த வரலாற்றை நாம் காப்பாற்ற வேண்டும் என்றால் அது நீங்கள் எதிரியாக சித்தரிக்கிற ஒரு ஒற்றை முனை பற்றியது அல்ல! உங்களை சுற்றி இருக்கிற வட்டத்தைப் பற்றியதும் கூட. வரலாற்றுக்கான உண்மையான தரவுகளுக்கான விரோதிகள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். உங்களுக்கு ரொம்ப பக்கத்திலேயே இருக்காங்க. உங்கள் அருகிலே உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்களிடமிருந்தும் நீங்கள் வரலாற்றை காப்பாற்ற வேண்டும். நான் என்ன சொல்ல விரும்புறேன் கேட்டீங்கன்னா, தரவு சார்ந்து இயங்கணும்.
 
வரலாறு என்பது வெறும் மண் சார்ந்ததா ?அல்லது மனிதர்கள் சார்ந்ததா ?
 
இந்த தெளிவில்லாமல் வரலாறு பற்றி பேசவே முடியாது. பயணங்களால் கட்டமைக்கப்பட்டதே வரலாறு. மனிதகுல வரலாறு என்பது பயணங்களின் கூட்டுத்தொகை.
 
பாதையை விட முக்கியம் பயணம். எந்த ரூட்ல போனாங்கிறதை விட பயணம் Journey is more important. பயணத்தை விட முக்கியமானவன் பயணி. பயணம் என்ன பெரிய பயணம், பயணி எங்கெங்க போயிருக்கான், மெக்ஸிகோக்கு போயிருக்கான், 600 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் அடிமைகள் மெக்ஸிகோல போய் வேலை பார்த்திருக்கான், 400 ஆண்டுகளுக்கு முன்னால் Fiji தீவுக்கு போயிருக்கான். உலகத்தினுடைய எல்லா மூலைகளிலும் அவன் பயணித்திருக்கிறான். வாழ்க்கை அவனை தள்ளியது திசைகள் என்பவை நேற்று வந்தவை. தேடல்கள் மனிதனின் உடன் பிறந்தவை !
 
சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு
 
எங்களுடைய ஆசிரியர் ஐராவத மகாதேவன் கூட சொல்றாரு ஏன் 'திராவிட கருதுகோள்' என்று சொல்றீங்க 'திராவிடமே' சொல்லுங்கள். ஏனென்றால் சிந்து மொழி பொறிப்புகளை ஒரு இருமொழி பொறிப்புகளின் துணையோடு வாசித்து ஒருவன் உலகத்திற்கு அறிவிக்கும் வரை 99% அப்படி ஒரு டவுட்டை கிரியேட் பண்ணி இதுதான் என்ற சூழலை பண்பாட்டு தரவுகள் பன்முகத் தரவுகள் மரபணு தரவுகள் தொல்லியல் தரவுகள் இதையெல்லாம் சேர்த்து வச்சு உருவாக்கி அந்த இடத்துல வந்து நிறுத்திரனும். அதுக்கு பின்னால அதை மக்கள்ட்ட கொண்டு போய் சேர்க்க வேண்டிய வேலையை இயக்கத்தை சார்ந்தவர்கள் அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் பொதுமக்களிடம் எடுத்துட்டு போகணும். என்னை போன்ற ஆய்வாளர்கள் இதுதான் முடிஞ்ச முடிவு அப்படின்னு சொன்னா I take a side, no researcher takes a side. ஒரு தகுதி உள்ள எந்த ஆய்வாளரும் இதுதான் வசதியாக ஓர் இடத்தை தேர்ந்தெடுக்க மாட்டான்.
 
பாலகிருஷ்ணனை பற்றி
 
நான் வந்து படிச்சிட்டு, ஆசிரியரா போகக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு முனைவர் ஆகக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு, ரிசர்ச் பண்ணாம நான் வெளிய ஓடி போயிட்டேன். ஒரு ₹240 சம்பளத்துக்கு பத்திரிக்கையாளரா போயிட்டேன். பத்திரிக்கையாளரா இருந்து அங்க இருந்து ஐஏஎஸ் போயிட்டேன். ஆனா தொடர்ந்து ரிசர்ச் பண்ணிட்டே இருக்கேன் நான் சொல்லிட்டு தான் போனேன் எங்க ப்ரொபசர்ட்ட I will not do PhD research but I will spend my entire life in doing research.
 
அகழாய்வுகளின் அவசியம்
 
1930களில் தீட்சித் என்பவர் சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு உரை நிகழ்த்துறார். அது 1939ல புத்தகமா வருது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதை ஒட்டிய பகுதிகளில் பண்டைய துறைமுகமான பகுதிகளில் முழுமையான அகழாய்வுகள் செய்யப்பட வேண்டும். அத்தகைய அகழ்வாராய்ச்சிகள் சிந்துவெளி பண்பாட்டின் சமகால பண்பாடு அல்லது சற்று பிந்தைய காலகட்ட பண்பாடு என்று கருதத்தக்க ஒரு பண்பாட்டிற்கான தடையங்களை அளிக்கக்கூடும். இன்னைக்கு அவரது உரை முடிந்து 80 வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு.
 
இரண்டாயிரத்துக்கு பிறகு தான் தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி குறித்த முயற்சிகள் நடைபெறத் தொடங்கின. இடைப்பட்ட காலத்தில் ஏன் எந்த முயற்சியையும் யாரும் எடுக்கவில்லை என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்
 

ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 2
 
சிந்துவெளியின் சிறப்பம்சங்கள்
 
சிந்து சமவெளி நாகரிகம் 13 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட நிலத்தை கொண்டது என்று கண்டுபிடித்து உள்ளார்கள். ஆப்கானிஸ்தானிலிருந்து ஆரம்பித்து யமுனை வரை பாகிஸ்தானுக்கு வடமேற்கில் உள்ள ஸ்வாட் பகுதியில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள தைமாபாத் வரை பரந்து விரிந்துள்ளது.
 
இது ஒரு ஆரிய பண்பாடு இது ஒரு வேத பண்பாடுன்னா குதிரை இல்லாத வேதமாயா ?குதிரை இல்லாத ஆரியரா ? நீ வரும்போதே குதிரையோட தானே வந்த இங்க எங்க குதிரை இருக்கு ? அப்படின்னு நம்ம ஆளுங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சோம்! அங்க வந்து காளமாடு இருக்கு ! கம்பீரமான காளமாடு இருக்கு ! எருமை மாடு இருக்கு !சிந்துவெளியில் இருந்தவங்க சுமேரியாவுக்கு எருமையை ஏற்றுமதி பண்றாங்க. எருமையை பழக்கின நாடு இது. சிந்துவெளி அவ்வளவு பெரிய ஒரு நாகரிகம் ரைனோசரஸ் இருக்கு, காண்டாமிருகம் இருக்கு, புலி இருக்கு ஆனா சிங்கம் இல்ல! குதிரை இல்ல !! காட்டு கழுதை இருக்கு ! ஆனா குதிரை இல்லை !
அசோகர் மரத்தை நட்டார் சாவடியை நட்டார் புத்த மதத்தை பரப்பினார் பொண்ணையும் மகனையும் இலங்கைக்கு அனுப்பினார் எல்லாம் படிக்கிறோம் ஆனா உங்களுக்கு தெரியுமா ஒரு 200 வருஷத்துக்கு முன்னால வரைக்கும் அசோகர்னு ஒரு ஆளு இந்த நாட்டுல வாழ்ந்தார்னே அப்படி ஒரு மன்னர் இருந்தாருன்னே யாருக்கும் தெரியாது.
 
ஜேம்ஸ் பிரின்சப்னு (James Prinsep) ஒரு வெளிநாட்டுக்காரர் வராம இருந்தா அசோகர்னு ஒரு ஆளு இங்க இருந்தாருங்கிறதே அமுக்கி இருப்பாங்க.
 
திராவிட மொழி குடும்பம் என்று ஒன்று இருப்பதை பிராகுயி மொழியிலிருந்து வடக்கில் இருக்கக்கூடிய மொழிகளை எல்லாம் தொட்டு திராவிட மொழி குடும்பம் என்ற கருத்தியலை எல்லி சொன்னாரு அதுக்கு பின்னால் இதை ஆணித்தரமாக முன்வைத்தது கால்டுவெல். அதனால "அவர்களுக்கு" கால்டுவெல் பிடிக்காது, பிரின்ஸ் பிடிக்காது.
 
பீகார் அருங்காட்சியகம் ரொம்ப நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டோம்
 
அங்கு சாணக்யா படத்தை பெரிதாக வரையப்பட்டு அதற்கு அருகில் சிறியதாக சந்திரகுப்த மௌரியரின் படத்தை வரைந்திருந்தார்கள் அதைக் கண்டு பின்வருமாறு கேள்வி கேட்டேன்.
சந்திரகுப்த மௌரியரை நீங்க கொண்டாடுறீங்களான்னு கேட்டேன். உடனே அவர் சொல்றாரு, சார் அந்த சந்திரகுப்த மௌரியரை கொண்டாட இப்பதான் இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சென்ற ஐந்து ஆறு வருடங்களாக சந்திரகுப்த மௌரியர் ஜெயந்தின்னு ஒன்னு கொண்டாடுறாங்க. அப்படின்னு சொல்லிட்டு அதோட சேர்த்து சொன்னாரு அந்த பங்க்ஷன் சார் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த எம்எல்ஏ மந்திரிங்க மட்டும்தான் சார் போவாங்க மத்த மந்திரிங்க எல்லாம் போகமாட்டாங்க சார். ஏனென்றால் இந்த சந்திரகுப்த மௌரியர் ஒரு தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர். அவர் முறா (Mura) என்ற அவருடைய அம்மாவினுடைய பெயரிலிருந்து மவுரியா (Maurya) என்கிற ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.
 
சந்திரகுப்த மௌரியரின் பற்றிய பின்னணியை தெரிந்து கொள்வோம்.
 
செலூகஸ் நிகேட்டர் (Seleucus I Nicator) என்பவர் அலெக்சாண்டர் பேரரசின் பிரதான படைத்தளபதிகளில் ஒருவர் மற்றும் அவரது முக்கியமான வாரிசுகளில் ஒருவர். அவர் செலூசிட் பேரரசை நிறுவினார். இது மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. அவர் சந்திரகுப்த மௌரியர் (Mauryan Empire) உடன் மோதினார். பின்னர் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் படி, அவர் சந்திரகுப்தருக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளை விட்டுக்கொடுத்தார் மற்றும் 500 போர் யானைகளைப் பெற்றார். இந்த ஒப்பந்தம் இந்தோ-கிரேக்க உறவுகளின் தொடக்கமாக கருதப்படுகிறது
சில வரலாற்று குறிப்புகளின்படி, செலூகஸ் தனது மகளை (ஒருவேளை ஹெலினா என்று பெயர்) சந்திரகுப்தருக்கு மணமுடித்துக் கொடுத்தார். இந்த திருமண உறவு, மௌரிய பேரரசு மற்றும் செலூசிட் பேரரசு இடையேயான இராஜதந்திர உறவை வலுப்படுத்தியது.
 
பாலகிருஷ்ணனின் உரை தொடர்கிறது
 
ஏன் சாணக்கியரைப் பற்றிய கேள்வி வறலாற்றுப்பதிவில் எங்கேயுமே கிடையாது. இது ஒரு வரலாற்று கதாபாத்திரம் கூட கிடையாது. அர்த்தசாஸ்திரம் அப்படியே ஊதி ஊதி பெருக்கி சினிமாவாக மாற்றி இப்ப கடைசியா சாணக்கியா சீரியல் என்று அந்த கதாப்பாத்திரத்தை அப்படியே ஊதி ஊதி பெருக்கி விட்டார்கள்.
ஒருவர் ஜெயிச்சு வந்ததுக்கே மூளையா இருந்தவர் ஒருத்தர், அவர் மூளைதான் பெரிய மூளை. ஒருத்தன் ஜெயிச்சான்னா உண்மையிலே ஜெயிச்சவனை பாராட்டணும். ஜெயிச்சவனுக்கு பக்கத்துல இன்னொரு கேரக்டர் கிரியேட் பண்ணி இவர் சொல்லிதான் எல்லாம் ஜெயிச்சாரு என்று பூசி முழுகிறார்கள்.
 

ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரையின் தொகுப்பு - பாகம் 1
 
பஞ்ச் வசனங்கள்
 
"வரலாறு என்பது வந்த வழி. பயணங்களின் கூட்டுத்தொகை தான் மனிதர்களின் வரலாறு"
"தரவுகளால் வரலாற்றை கட்டமைக்காவிட்டால் கட்டுக்கதைகள் வரலாறு என்ற பெயரில் உங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும். You can't do anything about it."
“சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே”
"காப்பாற்றப்பட வேண்டியது நிகழ்காலமும் எதிர்காலமும் மட்டுமல்ல கடந்த காலமும் தான்".
"வரலாறு என்பது மக்களின் வரலாறு. மக்களின் வரலாறே வரலாறு மற்றதெல்லாம் வரப்புத் தகராறு"
"வரலாறு என்பது உறைப்பனி அல்ல, ஓடும் நதி! வரலாறு என்பது உறைந்த பனி அல்ல, ஓடும் நதி! History is evolving and ever flowing stream."
"கீழடி என்பது வேறொன்றுமில்லை இன்னும் முழுவதுமாக தோண்டப்படாத சங்க இலக்கியம்.
சங்க இலக்கியம் என்பது வேறொன்றுமில்லை இன்னும் முழுவதுமாக வாசிக்கப்படாத கீழடி"
"சங்க இலக்கியம் என்பது ஒரு மீள் நினைவு இலக்கியம்"
“வரலாறு என்பது உரிமை. சலுகை அல்ல”.
"முதல் மூன்று நூற்றாண்டுகளில் 300 ஆண்டுகளில் தெற்காசியாவில் அச்சிடப்பட்ட புத்தகங்களில் 40 விழுக்காடு தமிழ் நூல்கள்."
"ஒரு நாட்டினுடைய ஒட்டுமொத்த வரலாறு என்பது வட்டார வரலாறுகளின் (Local History) கூட்டுத்தொகையாத்தான் இருக்கணும். Local History should be the building block for National History. அதில் விளிம்பு நிலை மனிதர்களுடைய வரலாறு இருக்கணும். The people from the fringes, voices of the voiceless அவர்களுடைய வரலாறு பேசப்பட வேண்டும்."
 
General Sir John Marshall
1924ல செப்டம்பர் 20 ஆம் தேதி ஜென் சார் ஜான் மார்ஷல் இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் வீக்ல அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்காவிட்டால் நம்முடைய வரலாறு வேற மாதிரி இருக்கும். அந்த வரலாறுல ஹரப்பா இருக்காது. முகஞ்சோதரா இருக்காது. கீழடி இருக்கவே இருக்காது. வேதங்கள் இருக்கும். ஆக, அந்த வரலாற்றை புரட்டிப் போட்ட ஒரு நிகழ்ச்சி நடந்தது.
ஜான் மார்ஷல் அவர்கள்தான் வேத காலத்திற்கு முந்தைய நாகரீகம் இந்தியாவில் இருந்துள்ளது என்பதை கண்டறிந்து அந்த நாகரீகம் திராவிட இனக் குழுவை சார்ந்தது என்ற கருத்தை தெரிவிக்கிறார். இந்தக் கருத்தை தான் இன்றும் மேலும் உறுதிப்படுத்துவதற்கு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் அகழ்வாராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
 
ஆர் பாலகிருஷ்ணனை பற்றி
நான் ஒரு சாதாரண பள்ளியில் படித்து ஒரு சாதாரண கல்லூரியில் படித்து யாரும் படிப்பதற்கு "பயப்படுகிற" தமிழ் இலக்கியத்தை படித்து வேறு எந்த தேர்வையுமே என் வாழ்க்கையில் எழுதாமல் ஒரே ஒரு முறை ஒரே ஒரு தேர்வுக்காக விண்ணப்பித்து ஒரே முறை எழுதி ஒரே ஒரு முறை நேர்காணலுக்கு டெல்லிக்கு முதன்முதலாக சென்று ஐஏஎஸ் வாங்கி எத்தனையோ பேர் சொல்லியும் பத்திரிக்கை துறையில் பணியாற்றி "தமிழ் மாணவர் நீங்க ஐஏஎஸ் ஆயிட்டீங்க!அதனால இங்க வந்து போகும்போது முதலமைச்சரை பார்த்துவிட்டு செல்லுங்கள் மீதி எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். கட்டாயம் நீங்கள் தமிழ்நாட்டில் தான் வேலை பார்க்க வேண்டும்" என்று சொல்லியும் கூட அவரை பார்க்காமல் மசூரிக்கு சென்றேன். ஏனென்றால் நான் தமிழ் படித்தவன் என்பதை எந்த வகையிலும் ஒரு சலுகையாக பயன்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் I am succumb to none ! நான் யாருக்கும் சளைத்தவன் இல்லை ! என்பதில் உறுதியாக இருந்ததால் என்னை இந்தியாவுல தானே போஸ்டிங் போட போறாங்க இந்தியாவில் எங்கிருந்தாலும் நான் வேலை பார்ப்பேன் என்று ஒரிசாவுக்கு போய் அங்கு ஒரிசா மாநிலத்தினுடைய பண்பாட்டுச் செயலாளராக நான்கு ஆண்டுகள் இருந்து நிதித்துறை செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றி மொத்தம் எட்டு பட்ஜெட்ல ஒர்க் பண்ணி இருக்கேன்.
 
இந்திய பல்கலைக்கழகங்களின் வீழ்ச்சி
ஐஐடில இருந்து எனக்கு ஒரு விருது கொடுக்கிறேன்னு சொன்னா வேண்டாம்னு விரட்டி விட்டுருவேன். ஏனென்றால் இந்த நாட்டில் இப்போது அறிவியல் தொழில்நுட்பக் கழகங்களில் அறிவியல் மனப்பான்மை (Scientific Temperament) குறைந்து அவர்கள் வரலாற்றில் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள், it's none of their business.
உலக பட்டியலை நீங்க கூகுள் செய்து பாருங்க. உலக நாடுகளின் பட்டியல்ல தலைசிறந்த உயர்நிலைக் கல்லூரிகள் அதாவது பல்கலைக்கழகங்கள் இந்த நிறுவனங்களை பாருங்க. கடந்த எட்டு ஆண்டுகளாக முதல் 150 பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கூட இல்லை. ஐஐடி ஐஐஎம் எல்லாம் சேர்ந்து ஒரு நிறுவனம் கூட இல்லை. எட்டு ஆண்டுகளுக்கு பின்னால் (2024 ஆண்டின் நிலவரப்படி) ஒரு 10 15 நாளைக்கு முன்னால தான் ரிசல்ட் வந்தது. ஐஐடி பாம்பே 149 ஆ வந்திருக்கு.
 
( Deepseek query string: Which college institution of India ranks in the top 150 among world's best college institutions in 2024 )
 
 
 

உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 3
 
8. குடும்பம் என்கிற கதம்பத்திலிருந்து அனாதைகளாக விடப்பட்ட குழந்தைகள் இருவரும் உதிரிப்பூக்களாக எஞ்சியிருப்பதாக இறுதிக்காட்சியில் காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் தலைப்புக்கு செய்த சிறப்பு.
9. படத்தின் நாயகர்களாக திகழும் இந்த இரண்டு குழந்தைகள்தான் கதையையும் திரைக்கதையையும் தீர்மானிக்கிறார்கள். ஆனால் ஒரு காட்சியில் கூட அவர்களை பேச அனுமதிக்காதது குறையாக பார்க்கிறேன்.
10. இசைஞானியின் இசை ஓவியம் போல் திரைப்படத்திற்கு தேவையான அழகிய நல்லுணர்வை வழங்குகிறது. “அழகிய கண்ணே” பாடலும் காட்சி அமைப்பும் காலத்தை வென்ற பாடலாக இன்றும் நிலைக்கிறது.
11. புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சிற்றன்னையை பற்றி எந்த ஒரு விமர்சனமும் குறையும் பெரிதாக பேசப்படவில்லை. மாறாக ஆணாதிக்கத்தை பெரிதுபடுத்தி பெண்களை ஆண்கள் எப்போதும் கொடுமைப்படுத்துவார்கள் என்கிற பொது புத்தியில் பதிந்த புரிதலையே திரைப்படமும் எதிரொலிக்கிறது. ஏன் சிற்றப்பன் எல்லாம் கொடுமை செய்ய மாட்டார்களா ? அவர்களுக்கு அம்மாதிரியான எண்ணம் தோன்றாதா ?வில்லத்தனத்தை சித்தி மட்டும் தான் காட்டுவாரா ? என்கிற கேள்வி எல்லாம் புதுமைப்பித்தனிடம் கேட்க வேண்டும். சிறுகதை ஆசிரியர் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு கதையை அமைத்துள்ளார். அதைப்போலவே நாமும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்கிற புரிதலுக்கு ஆசிரியர் உதாரணமாக திகழ்கிறார்.
12. இரண்டாவது மனைவியாக வருபவர் கணவனின் முதல் மனைவியின் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க தவறுகிறார். அதை சுட்டிக்காட்டிய கணவனுக்கு மழுப்பாலான பதிலை தருகிறார். அதை ஒரு குற்றம் குறையாகவே அவர் கருதவில்லை. இங்கே பெண்ணியம் பார்க்க தேவையில்லை. "பெண்கள் தான் குழந்தைகளை பார்க்க வேண்டும், ஆண்கள் பார்க்க வேண்டாமா ?" என்கிற கேள்விக்கு பொருள் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் கணவன் மனைவி யார் கடமையிலிருந்து தவறினாலும் அது தவறே. கணவன் கதாபாத்திரத்தை ஏற்கனவே வில்லனாக சித்தரித்து விட்டார்கள். அதனால் இயக்குனர் சரியான முறையில் தான் இத்தருணத்தை கையாண்டு இருக்கிறார்.
13. இரண்டாவது மனைவி தன் கணவனின் குழந்தைகளை பராமரிக்காதது பெரும் குறையாக கருதாது முதல் மனைவியின் தங்கையை கணவன் மான பங்கம் செய்வதை கண்டறிந்த உடன் எந்த ஒரு பெண்ணும் இதை அனுமதிக்க மாட்டாள் என்று வீர வசனம் பேசிய பிறகு கணவனை வெறுத்து விடும் அளவிற்கு ஒரே வினாடியில் மாறிவிடுகிறார். அதாவது தனது மனைவி பதவிக்கு ஒரு பங்கம் என்றால் அது குற்றம், அதுவே தான் தாய் ஸ்தானத்திலிருந்து குழந்தைகளை பராமரிக்க வேண்டிய கடமையிலிருந்து தவறினால் அது குற்றமில்லை என்கிற மனோபாவம் தான் இதில் ஒளிந்திருக்கிறது. பெண்களுக்கு இயல்பாகவே தன்னல உணர்வு ஆண்களை விட அதிகம். அதைத்தான் இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பதாக புரிந்து கொள்கிறேன். எவ்வாறு சாதி உணர்வும் இன உணர்வும் மொழி உணர்வும் நம் ரத்தத்திலேயே கலந்து அதை தவறு இல்லை என்கிற அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறோமோ அதே போலத்தான் பெண்களுக்கு இயல்பாகவே உள்ள தன்னல உணர்வினால் விளையும் தவறுகளையும் அவர்களை புண்படுத்தாதவாறு வசதியாக மறந்து விடுகிறோம்.
14. அடுத்த வீட்டு பிரச்சனை நம்மை பாதிக்காத வரை அது நம் பிரச்சனை கிடையாது என்கிற மனோபாவமே பல நூற்றாண்டுகளாக சமுதாயத்தில் இருந்து வருகிறது. அது ஏதோ இன்று நேற்று வந்தது கிடையாது. எண்பதுகளில் இத்திரைப்படம் வந்திருந்தாலும் அக்கால கட்டத்திலும் இதுவே தான் கதை. இறுதிக் காட்சியில் ஊரே திரண்டு வந்து மேலாளரை தாக்க வருவதாக காட்சிப்படுத்தியிருப்பதை சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பதால் அதையெல்லாம் நம்பத் தேவையில்லை.
15. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹாஜா செரிபை பெயரிடும் தருணத்தில் 'ராஜா' என்று அழைத்துள்ளனர். அதற்கான காரணத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.
நன்றி வணக்கம்.
 

உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 2
 
1. முதல் மனைவியை நோயாளி என்று தெரிவிக்கின்றனர். ஆனால் ஒரு காட்சியில் கூட ஏதோ ஒரு நோய் தாக்கியதைப் போல் இருமலோ காய்ச்சலோ இன்றி முழு மேக்கப்புடன் அமைதியே உருவான திடகாத்திரமான பெண்ணாக வலம் வருகிறார். இறுதியில் இறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் படுத்த படுக்கையாகி இறந்து போவதாக காட்சிப்படுத்தியிருப்பது அவரது ஆரோக்கியத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது.
2. வீட்டில் தண்டசோறு சாப்பிடும் வழக்கம் ஆண்களுக்கே உரிய பழக்கம் என்று கூறி பழக்கப்பட்ட சமூகத்தில் முதல் மனைவியின் தங்கை ஊரில் எந்த ஒரு வேலையும் செய்யாது அக்காவின் கணவர் சம்பளத்தில் அவர் வீட்டில் இல்லாத போது தண்டசோறு சாப்பிடும் படியான காட்சி அமைப்பு புதிதாக இருந்தது.
3. அரசுப்பள்ளி மேலாளர் வில்லனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் ஏன் அவ்வாறான வன்குணத்தை பெற்றிருந்தார் என்பதற்கான காரண காரியங்களை விளக்காமல் விட்டிருப்பது குறையாக பார்க்கிறேன். ஓரிரு காட்சியில் அவரது பெற்றோர்களின் குடும்பப் பின்னணியையும் வளர்ப்பு முறையையும் விளக்கி இருந்தால் அவரது கதாபாத்திரத்திற்கு மேலும் பலத்தை சேர்த்திருக்கும்.
4. தங்கையை திருமணம் செய்யவிருக்கும் மாப்பிள்ளை மேலாளருக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் காட்சியில் ஊரில் உள்ள பிராமணன் மற்றும் முடி திருத்தம் செய்யும் நாவிதன் போன்றோர்களின் பெயர்களை வரிசைப்படுத்தி கூறிய பிறகு மேலாளரின் பெயரை கடைசியாக சொல்லி கொடுப்பது மேலாளர் மீது எந்த அளவிற்கு வெறுப்பை வைத்திருந்தார் என்பதை பார்வையாளனுக்கு கடத்தும் வகையில் இயக்குனர் செய்திருப்பது சிறப்பு.
5. இறுதிக் காட்சியில் மேலாளர் ஆற்றில் விழுந்து இறந்து போவதாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை நேரடியாக காட்சிப்படுத்தாமல் ஊர் மக்களின் உணர்வு போராட்டத்தை மட்டுமே காட்டி இயக்குனர் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.
6. முதல் மனைவியான அக்கா இறந்த பின் குழந்தைகளை சரியான முறையில் கவனிக்காததால் மேலாளரை கண்டிப்பதற்காக தங்கை வருகிறார். அக்காட்சியில் தங்கையின் வசைச்சொற்கள் பின்னணியில் ஒலிக்க ஊர் மக்கள் அவரை கைகூப்பி வணங்குவது போன்று காட்சிப்படுத்தியிருப்பது குடும்பத்திற்குள் எவ்வளவு இழிவாக அவரை நடத்தினாலும் ஊரில் அவருக்குரிய மரியாதை கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது என்கிற நகைமுரனை காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. இயக்குனர் வேண்டுமென்றே இப்படி செய்யாவிட்டாலும் திரைப்படத்தின் எடிட்டர் என்கிற முறையில் பி.லெனின் அவர்களின் திறமையான பணி வியக்க வைக்கிறது.
7. ஒவ்வொரு நாள் காலையிலும் கதிரவனை கண்ட மகிழ்ச்சியில் பூக்கள் மலர்கின்றன. நறுமணத்தையும் அழகையும் பிறருக்கு அளித்து தம்மை சுற்றியுள்ள மனிதர்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்தளித்து தனது ஒரு நாளை பெரும் ஆரவாரத்துடன் அவை கடக்கின்றன. மாலையில் வாடி வதங்கி இறந்து போகையில் எந்த ஒரு துயரமும் துக்கமுமின்றி இறக்கின்றன. தினந்தோறும் பூக்கள் ஓர் வாழ்க்கைப்பாடத்தை மனிதர்களுக்கு நடத்திக் கொண்டே இருக்கிறது. மனிதர்களாகிய நாம் தான் அதை கவனிக்காமல் கடந்து செல்கின்றோம். பூக்களைப் போன்று நாமும் நம் வாழ்நாளை மகிழ்ச்சியோடு கழித்து பெருமாராவாரத்துடன் நாம் செய்ய வேண்டிய கடமைகளை சிறப்பாக செய்து இறக்கும் தருவாயில் எந்த ஒரு குற்றங்குறையுமின்றி இறந்து போக வேண்டும் என்கிற செய்தியே மனிதர்களாகிய நாம் பூக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று திரைப்படத்தின் வாயிலாக இயக்குனர் தெரிவிப்பதாக புரிந்து கொள்கிறேன்.
 
 

உதிரிப்பூக்கள் கூராய்வு பாகம் 1
 
ஒருமுறை இயக்குனர் மகேந்திரன் அவர்கள் ரயில் பயணத்தின் போது ஒரு பெண்மணி இரு சிறுவர்களுடன் பயணிப்பதை கவனிக்கிறார். அப்போது அச்சிறுவர்களில் ஒருவன் தன் அம்மாவிடம் ஆர்வமாக ஏதோ ஒரு தகவலை தெரிவித்துக் கொண்டிருக்கையில் அந்த அம்மா கவலை தோய்ந்த முகத்தில் எந்த ஒரு முகக்குறியையும் காட்டாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை கண்டு வியப்புற்று அதை அடிப்படையாகக் கொண்டு தனது முதல் திரைப்படத்தின் நாயகியின் கதாபாத்திரத்தை வடிவமைக்கிறார்.
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் முகபாவனைகளையும் உணர்வுகளையும் கவனித்தாலே அதிலிருந்து பல நூறு கதைகளை உருவாக்கி விடலாம் என்கிற கருத்தை உடையவர் ஒருவரால் மட்டுமே உண்மை உணர்வுள்ள கதைகளை உருவாக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர் இயக்குனர் மகேந்திரன் அவர்கள்.
கதைச்சுருக்கம்
கிராமத்தில் இயங்கி வரும் ஓர் அரசு பள்ளியின் மேலாளராக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் வருபவரான விஜயன் வருகிறார். தனக்கு கீழ் பணி புரியும் எந்த ஒரு ஆசிரியர் மீதும் மதிப்பும் மரியாதையும் அற்று சர்வாதிகார ஆட்சி செய்து வருகையில் புதிதாக ஒரு ஆசிரியர் கிராமத்திற்கு வருகிறார்.
இந்தியாவிற்கு சுதந்திரம் 1947 ஆம் ஆண்டு கிடைத்தாலும் பல கிராமங்களில் வெள்ளையனின் அடக்குமுறை ஆட்சியை இன்றும் ஏதோ ஒரு இந்தியன் மறக்காமல் பின்பற்றி வருவது கிராமங்களில் உள்ள பல்வேறு சாபக்கேடுகளில் ஒன்றாகும் என்கிற வசனம் அந்த ஊரில் நிலவிவந்த முன் கதைச் சுருக்கத்தை தெளிவாக உரைக்கிறது.
தொடர்ந்து, அரசுப்பள்ளி மேலாளரின் குடும்பப் பின்னணிக்குள் திரைப்படம் விரிகிறது. அவருக்கு ஒரு மனைவியும் மகனும் கைக்குழந்தையான மகளும் உள்ளனர். நோயாளியான மனைவிக்கு ஒரு தங்கையும் ஊரில் பெரும்பாலான நபர்களிடம் கடன்களைப் பெற்று அதை திருப்பி செலுத்த முடியாமல் சிக்கித் தவிக்கும் தந்தையும் உள்ளனர்.
மேலாளர் தான் நினைப்பதே சரி என்று நினைக்கும் குணம் கொண்டவர். இம்மாதிரியான ஆட்களிடம் கவனமாக பழக வேண்டும். வன்மையான பல குணங்கள் அவர்களிடம் நிறைந்திருந்தாலும் அவ்வப்போது சில நல்ல குணங்களும் வெளிப்படும். அதைப் பற்றிக் கொண்டே நாம் அவர்கள் போக்கில் சென்று அவர்களிடம் பழகுவதே நம் மரியாதைக்கு சிறப்பு சேர்க்கும். அவ்வாறே ஊர் மக்களும் அவரது குடும்பத்தினரும் மிகவும் கவனமாக அவரிடம் பழகுகின்றனர்.
ஆணாதிக்கத்தில் ஊறி திளைத்தவரான மேலாளருக்கு மனைவியின் தங்கையின் மீது விருப்பம் உள்ளது. சீக்கிரமே தன் மனைவி இறந்து விடுவார் என்கிற நம்பிக்கையில் தங்கையை இரண்டாவது திருமணம் செய்ய விரும்புகிறார். அதை தன் மனைவியிடமும் மாமனாரிடமும் தெரிவிக்கிறார். அதற்கு அவர்கள் உடன்படாததால் வெளியூரில் உள்ள ஓர் பணக்கார வீட்டு பெண்ணை மனைவி இறந்த பின் தன் தாயின் தூண்டுதலின் பேரில் மறுமணம் செய்து கொள்கிறார்.
இதன் விளைவாக, தங்கையின் வாழ்க்கையில் எந்த ஒரு இடையூறும் மேலாளர் விளைவிக்க மாட்டார் என்கிற நம்பிக்கை உருவானதால் ஊருக்கு புதிதாக வந்த பள்ளி ஆசிரியரை திருமணம் செய்ய தங்கை ஒப்புக் கொள்கிறார். அதேசமயம் தனது அக்காவின் குழந்தைகளை தம்முடனே வளர்க்கவும் திட்டமிடுகிறார். மேலும் புது மாப்பிள்ளையும் மேலாளரின் கீழ் பணி செய்ய விரும்பாததால் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்ததோடு மேலாளர் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக தமிழக அரசுக்கு கடிதம் மூலம் மேலாளர் அது வரை செய்து வந்த ஊழலை சுட்டிக்காட்டி அவர் மீதான நடவடிக்கை எடுக்க போதுமான செயல் திட்டத்தை வகுத்த தகவலை திருமண பத்திரிக்கை கொடுக்கும் வேளையில் தெரிவிக்கிறார்.
என்னதான் மேலாளருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்று இருந்தாலும் முதல் மனைவியின் தங்கையின் மீதுள்ள விருப்பம் இன்னும் அடங்கவில்லை. மேலும் தனது குழந்தைகளும் தன்னை விட்டு பிரிவதை விரும்பவில்லை. புது மாப்பிள்ளையின் மிரட்டலுக்கு பயந்து தனக்கு கிடைக்காவிட்டாலும் வேறு யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் மைத்துனியை மானபங்கம் செய்து விடுகிறார். இதைக் கண்ட இரண்டாவது மனைவியும் அவரை வெறுத்து விடுகிறார்.
தகவல் அறிந்த ஊர் மக்கள் அவரை கொல்ல முற்றுகையிடுகின்றனர். இறுதியில் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்.
தந்தையையும் தாயையும் இழந்த குழந்தைகள் குடும்பம் என்கிற கதம்பத்தில் மிஞ்சி இருக்கும் உதிரிப் பூக்களாக நிற்பதோடு திரைப்படம் நிறைவடைகிறது.

Wednesday, November 06, 2024

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 10

1. கடிமா முலிலோ என்ற நகரம் நமீபியாவில் அமைந்துள்ளது, ஜாம்பியாவில் இல்லை. இருப்பினும், கதிமா முலிலோ ஜாம்பியாவின் எல்லைக்கு அருகில் உள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையில் அதன் இருப்பிடம் குறித்து சில சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

2. நமீபியாவின் கடிமா முலிலோவிலிருந்து ஜாம்பேசி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஒரு ஜாம்பியன் நகரம் செஷேக். Sesheke மற்றும் Katima Mulilo வெவ்வேறு நாடுகளில் உள்ள தனித்தனி நகரங்கள் என்றாலும், அவை வர்த்தகம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் கடிமா முலிலோ பாலம் வழி பயணம் மூலம் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.

3. கடிமா முலிலோ மற்றும் செஷேக் இடையேயான பாலம் நமீபியாவிற்கும் சாம்பியாவிற்கும் இடையில் சரக்குகள் மற்றும் மக்களின் நடமாட்டத்தை எளிதாக்குகிறது. ஜாம்பேசி நதி இயற்கையான எல்லையாக செயல்படுகிறது, ஆனால் பாலம் பயணத்தை எளிதாக்குகிறது.

4. Higer என்பது நம்பகமான, நீண்ட ஆயுள் கொண்ட பேருந்துகள் மற்றும் பெட்டிகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற சீன பேருந்து தயாரிப்பு நிறுவனமாகும். ஜிம்பாப்வேயில், ஹைகர் பேருந்துகள் மலிவு விலை, நவீன வடிவமைப்பு மற்றும் நீண்ட தூரப் பயணங்களைக் கையாளும் திறன் ஆகியவற்றின் காரணமாக பிரபலமடைந்துள்ளன. அவை பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் ஆப்பரேட்டர்களின் விருப்ப தேர்வாக அமைகின்றன.

5. Birds Park: ஹராரேயில் உள்ள பறவை பூங்கா, குய்ம்பா ஷிரி பறவை பூங்கா என்று அழைக்கப்படுகிறது, இது ஹராரேவுக்கு வெளியே 30 கிமீ தொலைவில் சிவெரோ ஏரிக்கு அருகில் அமைந்துள்ள பிரபலமான பறவைகள் சரணாலயமாகும். இது பறவை பிரியர்களுக்கு நன்கு அறியப்பட்ட இடமாகும், இது பரந்த அளவிலான பறவை இனங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் பல ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவை மற்றும் உலகில் உள்ள பல அரிய வகை பறவை இனங்களையும் இங்கே காணலாம்.

6. Bateleur என்பது ஆப்பிரிக்காவில், குறிப்பாக சஹாரா அல்லாத பகுதிகளில் காணப்படும் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் தனித்துவமான பறவையாகும். இது அதன் வண்ணமயமான தோற்றம் மற்றும் தனித்துவமான பறக்கும் தன்மைக்காக அறியப்படுகிறது.

7. ஜிம்பாப்வேயின் $100 பணத்தாளில் Bateleur கழுகு சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிம்பாப்வே நாட்டு மக்களின் பரம்பரை சின்னமாகவும் பேட்லூர் கழுகு சேர்க்கப்பட்டுள்ளது. இது வலிமை, சுதந்திரம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பிற்கான நாட்டின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. சிம்பாப்வே நாட்டு மக்களின் பரம்பரை சின்னத்தில் (Coat of Arms) கழுகு இருப்பது ஜிம்பாப்வேயின் இயற்கை பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

8. Lion's Park ஹராரேக்கு வெளியே புலவாயோ சாலையில் சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது நகரத்திலிருந்து பிரபலமான ஒரு நாள்-பயண இடமாக விளங்குகிறது.

9. ஜிம்பாப்வேயில் 70 முதல் 80 தமிழர்கள் வாழ்கிறார்கள். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் வாழ்கிறார்கள்.

10. ஹராரே நகரில் உள்ள இந்து கோவில் - ஹரே கிருஷ்ணா கோவில் (ISKCON Harare), இந்து சமுதாயத்திற்கான புனித தளமாகவும், ஆன்மீக மற்றும் கலாச்சார மையமாகவும் செயல்படுகிறது.

11. மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் என்பது பல ஆப்பிரிக்க நாடுகளின் சுற்றுலா சுகாதாரக் கொள்கையின் ஒரு முக்கிய ஆவணமாகும். இது பயணிகள் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) எனும் கொசுக்களால் பரவக்கூடிய வைரஸ் நோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுள்ளதை நிரூபிக்கிறது. சில ஆப்பிரிக்கா நாடுகள், மஞ்சள் காய்ச்சல் பாதிப்பு இல்லாத பகுதிகளாக இருந்தாலும், மஞ்சள் காய்ச்சல் பரவும் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இந்த சான்றிதழை கேட்கலாம்.

12. ஆப்பிரிக்கா நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன்பு, நீங்கள் செல்லும் நாட்டின் சுகாதார தேவைகளை சரிபார்க்க வேண்டும், ஏனெனில் இவை உள்ளூர் சுகாதார நிலைமைகளின் அடிப்படையில் மாறுபடக்கூடும். WHO மற்றும் CDC போன்ற அமைப்புகள், இந்த விதிகளைப் பற்றிய தெளிவான தகவல்களை வழங்குகின்றன.

13. மன்யாரா ஏரி (Lake Manyara) என்பது தான்சானியா நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற ஏரியாகும். இது தான்சானியாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும்.

14. மன்யாரா ஏரி தான்சானியாவின் பெரிய பிளவு பள்ளத்தில் (Great Rift Valley) அமைந்துள்ளது. இது அருஷா நகரம் மற்றும் நோரோஙொரோ பள்ளத்தாக்கு (Ngorongoro Crater) இடையில் அமைந்துள்ள முக்கிய பகுதியாகும்.

15. மன்யாரா ஏரி ஒரு சோடா ஏரி ஆகும், அதாவது இதன் நீர் அதிக ஆல்கலைன் தன்மை கொண்டது. இதனால் ஏரியின் நீரில் ஒரு குறிப்பிட்ட வகை பாசி (algae) வளர்க்கப்படுகிறது, இது பட்டாம்பூச்சிகளை பெரிதும் ஈர்க்கிறது.

16. மொத்தத்தில், மன்யாரா ஏரி தான்சானியாவில் உள்ள ஒரு அழகிய மற்றும் புகழ்பெற்ற சுற்றுலா மையமாகும், இது இயற்கை, விலங்குகள், மற்றும் பறவைகளை நேசிப்பவர்களுக்கு நெருக்கமான இடமாகும்.

17. கென்யா தலைநகரம் நைரோபியிலிருந்து மும்பைக்கு செல்லும் கென்யா ஏர்வேஸ் விமானம் பல சமயங்களில் ரத்தாகும் சூழல் நிலவுகிறது. மும்பைக்கு ஒரு நாளைக்கு இரண்டு விமானங்கள் செல்கின்றன. மாலை 4 முக்காலுக்கு ஒன்றும் இரவு 9 முக்காலுக்கு ஒன்றும் என்று இரு விமானங்கள் செல்கின்றன. பல சமயங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் இரு விமானங்களை ஒரே விமானமாக இரவு 10 மணிக்கு ஒன்றாக இணைத்து அனுப்புகின்றனர். அதனால் மாலை நான்கே முக்கால் மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் தாமதமாகும் சூழ்நிலை நிலவுகிறது.

16. பொதுவாக ஏர்டெல் போஸ்ட் பெய்டு சந்தா வைத்திருப்பவர்கள் இந்தியாவிற்குள் வெளிநாட்டிலிருந்து மீண்டும் திரும்புகையில் சில சமயம் வேலை செய்யாது. திரும்பவும் ஏர்டெல் சிம் கார்டை மறு உயிர்பிக்க வேண்டி ஏர்டெல் கடைக்கு செல்ல வேண்டி வரும். முன் முயற்சியாக கைபேசியை ஆப் செய்து விட்டு மீண்டும் ஆன் செய்து பார்க்கலாம்.

முற்றும்.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 9

1. ஆப்பிரிக்காவின் சாகச தலைநகரமாக விக்டோரியா நீர்வீழ்ச்சி அமைகிறது.

2. உலகில் ஏழு இயற்கையாக அமைந்த அதிசயங்கள் உள்ளன. அவை 1) அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கு Grand Canyon. 2) ஆஸ்திரேலியாவில் உள்ள மிகப்பெரிய பவளப் பாறைகள் The Great Barrier Reef , 3) நேபாளில் உள்ள எவரெஸ்ட் சிகரம், 4) ஆர்க்டிக் வளைவில் உள்ள அரோரா Borealis, 5) பிரேசில் தலைநகரமான ரியோடி ஜெனி ரோவில் உள்ள துறைமுகம், 6) மெக்சிகோவில் உள்ள Paricutin எரிமலை, 7) இறுதியாக ஜிம்பாப்வே-ஜாம்பியா எல்லையில் உள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி அமைகிறது.

3. விக்டோரியா நீர்வீழ்ச்சி நுழைவு கட்டணமாக 50 அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் ஜிம்பாப்வே மக்களுக்கு வெறும் ஏழு டாலர் தான். தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வேயின் அண்டை நாடுகளில் வசிப்பவர்களுக்கு 20 டாலர்கள்.

4. சாம்பியாவில் உள்ள மலைகளில் கிளம்பும் Zambezi நதி பல்வேறு கிளை நதிகளின் சங்கமத்தில் 2500 கிலோ மீட்டர்கள் பயணம் செய்து இந்திய பெருங்கடலில் கலக்கிறது. அதன் நடு பயணத்தில் அதாவது 1200 கிலோமீட்டர் தூரத்தில் விக்டோரியா நீர்வீழ்ச்சி அமைகிறது. பள்ளத்தாக்கில் விழும் நீர்வீழ்ச்சி மொசாம்பிக் நாட்டுக்குள் புகுந்து இறுதியில் இந்திய பெருங்கடலில் கலக்கிறது.

5. 19 ஆம் நூற்றாண்டில் டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் 1855இல் விக்டோரியா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தார். இவர் தான் இந்த நீர்வீழ்ச்சிக்கு இங்கிலாந்து ராணியின் பெயரை சூட்டினார்.

6. அதிக உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சியாக வெனிசுவேலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைகிறது. ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது.

7. உலகிலேயே அகலமாக விழும் நீர்வீழ்ச்சியாக தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் உள்ள Khone Phapheng நீர்வீழ்ச்சி அமைகிறது. 10 கிலோமீட்டர் அகலத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

8. 1.7 கிலோ மீட்டர் அகலம் கொண்ட விக்டோரியா நீர்வீழ்ச்சியின் 1.2 கிலோமீட்டர் ஜிம்பாவேயிலும் இதர 500 மீட்டர் சாம்பியாவிலும் உள்ளது.

9. Victoria நீர்வீழ்ச்சியின் அதிகபட்ச உயரம் 108 மீட்டர்கள் ஆகும்.

10. தண்ணீரின் கொள்ளளவை கணக்கில் கொண்டால் விக்டோரியா நீர்வீழ்ச்சியே உலகிலேயே அதிக அளவிலான தண்ணீரை கொண்ட நீர்வீழ்ச்சி என்று பெருமை பெறுகிறது. அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியை விட இரண்டு மடங்கு அதிக உயரமும் ஒன்றரை மடங்கு அதிக அகலமும் கொண்டது.

11. விக்டோரியா நீர்வீழ்ச்சியின் 75% ஜிம்பாப்வே பகுதியிலிருந்து காணலாம். நீர்வீழ்ச்சியின் 25 சதவிகிதமே ஜாம்பியாவிலிருந்து பார்க்க முடியும். ஆகவே விக்டோரியா நீர்வீழ்ச்சியை நன்றாக கண்டு ரசிக்க ஜிம்பாப்வே தான் மிகச் சிறந்த இடமாக விளங்குகிறது.

12. ஜிம்பாப்வேவிற்கும் சாம்பியாவிற்கும் இயற்கையாக அமைந்த எல்லையாக விக்டோரியா நீர்வீழ்ச்சி அமைகிறது.

13. நீர்வீழ்ச்சியின் அற்புதமான காட்சியைக் காண உகந்த மாதங்கள் மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை.

14. சாம்பியாவில் இருந்து நீர்வீழ்ச்சியின் 25 சதவீதத்தையே பார்க்க முடிந்தாலும் நீர்வீழ்ச்சி தொடங்குவதற்கு முன் Devil's pool என்ற ஒரு அமைப்பு உள்ளது. இதன் மூலம் நீர்வீழ்ச்சி விழுவதற்கு முன் உள்ள பாறையில் இருந்து தண்ணீரில் மிதந்த வாரே நீர்வீழ்ச்சி விழுவதை காணலாம்.

15. 1989இல் விக்டோரியா நீர்வீழ்ச்சி இயற்கையாக அமைந்த உலக பாரம்பரிய தளமாக ஐநா அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

16. ஜிம்பாப்வேயின் பெரிய சிதலமடைந்த பகுதியை (Great Zimbabwe Ruins) கலாச்சார ரீதியாக பாரம்பரிய தளமாக ஐநா அமைப்பு அங்கீகரித்துள்ளது.

17. ஜிம்பாப்வே சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் ஆங்கிலேயர்கள் வைத்த பல்வேறு இடங்களின் பெயர்களை தங்களது சொந்த மொழியில் உள்ள பெயரில் மாற்றி அமைத்தார்கள். ஆனால் விக்டோரியா நீர்வீழ்ச்சியை மட்டும் எந்தவித பெயர் மாற்றமும் இல்லாமல் இன்று வரை தொடர்கிறது. அதற்கான காரணம் விக்டோரியா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவரான லிவிங்ஸ்டன் மீதான மதிப்பும் மரியாதையும் ஆகும்.

18. உலகிலேயே Moonbow பார்க்க இரண்டு இடங்கள்தான் மிகவும் முக்கியமானது. அதில் விக்டோரியா நீர்வீழ்ச்சியும் ஒன்று. ரெயின்போ மாதிரியே நிலவின் வெளிச்சம் நீர் வீழ்ச்சியின் தண்ணீரில் பட்டு தெறிக்கும் ஒளியின் அழகை Moonbow என்று அழைப்பார்கள். இந்த அற்புதக் காட்சியினை பார்க்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் இரட்டிப்பாக உள்ளது. அதாவது 100 டாலர்கள் செலுத்திய பின்பே இந்த அற்புதக் காட்சிகளை வெளிநாட்டினர் பார்க்க இயலும்.

19. பிப்ரவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை அதிகமாக தண்ணீர் விழுவதால் மிகவும் அதிகமாக சாரல் இருப்பதால் பார்வையாளர்களுக்கு அருமையான காட்சியை பார்க்க முடியாமல் போகலாம் அதனால் நீர்வீச்சியை பார்ப்பதற்கு உகந்த மாதங்கள் மே முதல் ஆகஸ்ட் வரையிலான நான்கு மாதங்கள்.

20. ஜிம்பாப்வே பகுதியிலிருந்து பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 50 டாலர்கள் செலவாகும். அதுவே சாம்பியாவிலிருந்து பார்த்தால் 20 டாலர்களில் பார்த்து விடலாம்.

21. ஹெலிகாப்டர் பார்வையிலிருந்து பதினைந்து நிமிடங்களில் பார்க்க 100 முதல் 150 டாலர்கள் வரை செலவாகும். சிறிய ரக மைக்ரோ விமானம் மூலமாகவும் பார்வையிடலாம்.

22. Zambezi நதியில் வேகமாக பயணித்துக் கொண்டே நீர்வீழ்ச்சியை பார்ப்பது அற்புத அனுபவமாக இருக்கும். Zimbabwe இல் இந்த படகு பயணத்திற்கு 130 டாலர்கள் செலவாகும். உலகிலேயே வேகமாக செல்லும் படகில் பயணிப்பதில் (River Rafting) நேபாள் முதலிடம் வகிக்கிறது.

23. விக்டோரியா நீர்வீழ்ச்சி அருகே ஒரு பாலம் உள்ளது. அதுதான் ஜிம்பாப்வேயையும் ஜாம்பியாவையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது. 1905-1910 இடையிலான ஆண்டுகளில் இந்த பாலம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கிலாந்தில் கட்டப்பட்ட இந்த பாலம் ஜிம்பாப்வேவிற்கு எடுத்து வந்து ஒருங்கிணைத்தனர்.

24. Upper Zambezi நதி என்றும் பள்ளத்தாக்கில் விழுந்த பிறகு Lower Zambezi நதியாகவும் பயணிக்கிறது.

25. தண்ணீர் குறைவாக பாயும் காலமான செப்டம்பர் முதல் டிசம்பர் வரை இருக்கும். சாம்பியா பகுதியில் மிகவும் குறைவான தண்ணீரே காணப்படும். அப்படி இருந்தும் ஜிம்பாப்வே பகுதியில் மிதமான அளவு தண்ணீர் பாய்ந்து கொண்டே இருக்கும்.

26. ஜிம்பாப்வேயில் இருந்து விக்டோரியா நீர்வீழ்ச்சியை ஹெலிகாப்டர் சவாரி மூலம் பார்வையிடுவதற்கு சுமார் 175 டாலர்கள் செலவாகும்.

27. விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் உள்ள நகரம் ஜிம்பாப்வேயில் அமைந்துள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி டவுண் ஆகும். பயணிகள் தரையில் இருந்து நீர்வீழ்ச்சியைப் பார்க்க அல்லது சுற்றியுள்ள மழைக்காடுகளை ஆராய அருகிலுள்ள நகரமான Livingstone லிவிங்ஸ்டோனுக்கு (சாம்பியாவில் அமைந்துள்ளது) பயணிக்க வேண்டியிருக்கும்.

28. 2,574 கிமீ (1,599 மைல்) தூரம் பயணிக்கும் ஜாம்பேசி நதி சாம்பியாவில் எழுகிறது மற்றும் கிழக்கு அங்கோலா வழியாக, நமீபியாவின் வடகிழக்கு எல்லை மற்றும் போட்ஸ்வானாவின் வடக்கு எல்லை வழியாக பாய்கிறது, பின்னர் ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வேக்கு இடையேயான எல்லையில் கடந்து மொசாம்பிக் வரை பாய்கிறது. இறுதியில் இந்தியப் பெருங்கடலுக்குள் கலக்கிறது.

29. ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த ஆன்மீக பரப்புரையாளரும் ஆய்வாளருமான டாக்டர். டேவிட் லிவிங்ஸ்டோன் 1855 ஆம் ஆண்டில் நீர்வீழ்ச்சியைக் 'கண்டுபிடிப்பதற்கு' நீண்ட காலத்திற்கு முன்பே, உள்ளூர் படோங்கா மக்கள் நீர்வீழ்ச்சியை Mosi-oa-Tunya 'இடி முழக்கும் புகை' என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 8

1. ஜிம்பாப்வேயின் கோடைகாலமான டிசம்பரில் இருந்து ஏப்ரல் வரை அதிக மழை பொழிவு இருக்கும்.

2. ஜிம்பாப்வேயில் இரண்டு டாலர் பணத்தாள் புழக்கத்தில் உள்ளது. அமெரிக்காவிலேயே இரண்டு டாலர் பணத்தாள் கண்ணில் படாத போது ஜிம்பாப்வேயில் கிடைப்பது வியப்பாக உள்ளது.

3. ஜிம்பாப்வேயில் ஹராரேவிற்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய நகரம் புலவாயோ, மஸ்விங்கோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஹாரரேவிலிருந்து 300க்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மஸ்விங்கோ.

4. புலவாயோ ஜிம்பாப்வேயின் முக்கிய தொழில் மைய நகரமாகும். அதன் முக்கிய உற்பத்தி துறைகள் - ஆட்டோமொபைல்கள், டயர்கள், கான்கிரீட் மற்றும் பிற கட்டுமான பொருட்கள், ரேடியோக்கள், தொலைக்காட்சி பெட்டிகள், ஜவுளி மற்றும் உணவு ஆகும்.

5. ஜிம்பாப்வே இரயில்வேயின் தலைமையகமாக விளங்கும் புலவாயோ, தென்னாப்பிரிக்காவிற்கு கொண்டு செல்ல மற்றும் அங்கிருந்து அனுப்பும் பொருட்களை பாதுகாத்து வைக்க உதவும் முக்கிய இடமாற்று பகுதியாகும். இந்த நகரம் ஒரு கட்டத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது மற்றும் தோற்றத்தில் நவீனமானது, பரந்த தெருக்கள் மற்றும் பல புதிய கட்டிடங்கள், இரண்டு ஆசிரியர் கல்லூரிகள், ஒரு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

6. புலவாயோவை ராஜாக்களின் நகரம் என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

7. 1840களில் தென்னாப்பிரிக்காவின் ஜூலுலாந்தில் (Zululand) இருந்து டெபிலி (Ndbele) இன மக்கள் பெரும் மலையேற்றத்திற்குப் பிறகு நவீன ஜிம்பாப்வேயில் குடியேறிய Mzilikazi மஜிலிகாசி மன்னரின் மகன் Lobengula லோபெங்குலா என்ற Ndbele இன மன்னரால் புலவாயோ நகரம் நிறுவப்பட்டது.

9. புலவாயோ என்ற பெயர் isiNdebele வார்த்தையான KoBulawayo என்பதிலிருந்து வந்தது, அதாவது 'அவர் கொல்லப்படும் இடம்' என்று பொருள்படும். நகரம் உருவான நேரத்தில், Ndebele குலங்களுக்கிடையே 'உள்நாட்டுப் போர்' இருந்ததாக கருதப்படுகிறது. இளவரசர் லோபெங்குலாவுடன் ஒத்துப்போகாத டெபிலி (Ndebele) குழு அவருடன் சண்டையிட்டது, ஏனெனில் அவர் அரியணைக்கு சரியான வாரிசு இல்லை என்று அவர்கள் உணர்ந்தனர், எனவே லோபெங்குலா தனது தலைநகருக்கு 'அவர் (இளவரசர்) அங்கே கொல்லப்படுகிறார்' என்று பெயரிட்டார். அந்த நேரத்தில் லோபெங்குலா தனது தந்தையின் (Mzilikazi) சிம்மாசனத்தில் அமர்வதற்காக போராடும் இளவரசராக இருந்தார்.

http://www.zimbabweconnections.com/bulawayo-city-2/

10. ஜிம்பாப்வேயில் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தினந்தோறும் மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியுறும் நிலைமை உள்ளது. புலவாயோவில் பெரும்பாலும் இரவு நேரத்தில் தெருக்களில் மின்விளக்குகளே இருக்காது.

11. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் புலவாயோவில் இருந்து அருகில் இருக்கும் மற்ற நாடுகளுக்கு ரயில் மூலமாகவே சரக்கு போக்குவரத்திற்காக ரயில் உபயோகப்படுத்தப்பட்டது. தற்போது ரயில்வே நிர்வாகம் மூடப்பட்டதால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. 2001 முதல் 2006 வரை மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே நிர்வாகம் இருந்தது. மக்களும் பயணித்து வந்தனர். மீண்டும் 2017 முதல் கோவிட் காலம் வரை மக்கள் பயன்பாட்டில் இருந்தது. கோவிட் காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டது. 2021 மீண்டும் திறக்கப்பட்டது. 2023 முதல் மீண்டும் மறு தேதி அறிவிக்கப்படாமல் மூடப்பட்டது. புலவாயோவில் இருந்து ஹராரேவிற்கும் விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கும் மொசாம்பிக்கிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் சாம்பியாவிற்கும் ரயில் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

12. 1893 இல் Rhodesia ரயில்வே என்ற பெயரில் தொடங்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1980 இல் National Railways of Zimbabwe என்று தனியார் வசம் இருந்த ரயில்வே நிர்வாகம் ஜிம்பாப்வே அரசின் கீழ் மாற்றப்பட்டது. குட்வின் முர்ரே என்பவர் தான் தற்போது ரயில்வே அருங்காட்சியகத்தை நிர்வகித்து வருகிறார்.

13. தென் ஆப்பிரிக்காவில் குரூகர் (Kruger) தேசிய பூங்கா, சாம்பியாவில் தெற்கு லுவாங்வா (South Luangwa) பூங்கா, நமீபியாவில் (Etosha) எட்டொசியன் தேசியப் பூங்கா, இம்மூன்று பூங்கா தான் தெற்கு ஆப்பிரிக்காவில் மிகவும் பிரபலமானவை. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவில் உள்ள செரெங்கிடி (Serengity) தேசியப் பூங்கா மற்றும் கென்யாவில் உள்ள Masai Mara போன்ற பூங்காக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.

14. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தற்போதுள்ள தலைநகரமான ஹராரேவிற்கு சாலிஸ்பெரி என்ற பெயர் இருந்தது. ஜிம்பாப்வே சுதந்திரம் பெற்ற பிறகு தங்களது பழங்குடி இன மொழியான சோனா மக்களின் தாய் மொழியில் நாட்டின் பெயர் மாற்றப்பட்டது. அதனால் ஹராரே என்று இன்று அழைக்கப்படுகிறது.

15. Botswana : 1966 இல் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு போட்ஸ்வானா பெச்சுவானாலாந்து என்று அழைக்கப்பட்டு ஆங்கிலேயர்களின் பாதுகாப்பு அரணாக இருந்தது. இது உலகின் மிகவும் ஏழ்மையான மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகும். இந்த நாடு அதன் ஆதிக்க இனக்குழுவான Tswana ஸ்வானாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.

16. 1901-இல் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் ஜிம்பாப்வேயின் Hwange நகரில் இருந்தது. அதன் பொருட்டு தென் ஆப்பிரிக்கா தலைநகரமான கேப்டவுனில் இருந்து எகிப்தின் தலைநகரமான கைரோ வரை செல்லும் ரயில் பாதையில் Hwangeவை கடந்துதான் விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு செல்லும் ரயில் வழி பாதை அமைத்திருந்தனர்.

17. ஹாரரேவில் 90 விழுக்காடு சோனா இன மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் புலவாயோவில் பெரும்பான்மையினராக டெபிலி (Ndbele) இன மக்கள் வாழ்கிறார்கள். ஜிம்பாப்வேயில் ஒட்டுமொத்தமாக 70% சோனா இன மக்களும் 20% Ndbele இன மக்களும் இதர பத்து சதவீதத்தினர் மற்ற இன மக்களும் வாழ்கிறார்கள்.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

எம்ஜிஆர் பாடல்கள்

எம்ஜிஆர் என்ற ஆளுமையை கட்டமைத்தது பாடலாசிரியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. தனி மனிதராக அவர் எவ்வாறான குண நலன்களை பெற்றிருந்தாலும் சினிமா என்ற பொதுத்தளத்தில் பொதுவான நல்ல கருத்துக்களையே மக்கள் மனங்களில் விதைத்துள்ளார். எந்த ஒரு தருணத்திலும் தவறான முன்னோடியாக தான் இருந்து விடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்துள்ளார். அவரது களங்கமில்லாத முனைப்பே காலம் கடந்தும் அவரது புகழை இன்று வரை மங்காது ஒளிரச் செய்கிறது. அரசியலுக்கு வர துடிக்கும் தமிழ் திரை கலைஞர்கள் தம்மிடம் இந்த நற்குணங்கள் இருக்கிறதா (அ) இருந்ததா என்பதை சுய பரிசோதனை செய்து கொண்டு பொதுக்களத்தில் நடமாடினால் நல்லது.

சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளதாக பின்வரும் பாடல் வரிகள் உணர்த்துகின்றன. ஏதோ ஒரு பாடலில் மட்டும் சொல்லி விட்டு சென்று விடாமல் பல பாடல்களில் மீண்டும் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தியிருப்பது பொதுமக்களிடம் நல் மதிப்பை பெற உதவி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

“அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான பூமி என்று பெயருமிட்டால்

இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்.” (நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா)

"மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமோ?

மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?

உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

படைத்தவன் மேல் பழியுமில்லை

பசித்தவன் மேல் பாவம் இல்லை

கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்

உழைத்தவர்கள் தெருவில் நின்றார்

பலர் வாட வாட சிலர் வாழ வாழ

ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை"

“பொருள் கொண்ட பேர்கள்

மனம் கொண்டதில்லை

தரும் கைகள் தேடி

பொருள் வந்ததில்லை

மனம் என்ற கோயில்

திறக்கின்ற நேரம்

அழைக்காமல் அங்கே

தெய்வம் வந்து சேரும்

அழுதவர் சிரிப்பதும்

சிரிப்பவர் அழுவதும்

விதி வழி வந்ததில்லை

ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம்

இறைவனும் தந்ததில்லை

புத்தன் யேசு காந்தி பிறந்தது

பூமியில் எதற்காக

தோழா ஏழை நமக்காக”

"நான் ஆணையிட்டால்" மாதிரியான கம்பீரமான, ஆண்மையான பாடல் இதுவரை தமிழ் திரையுலகில் வெளி வந்ததே கிடையாது என்று நினைக்கிறேன். எவ்வளவோ குத்து பாடல்கள் மற்றும் நாயக அறிமுக பாடல்கள் வெளிவந்திருந்தாலும் இந்தப் பாடலை மட்டும் இன்று வரையிலும் எந்த பாடலும் தோற்கடித்ததில்லை என்பது மட்டும் உண்மையான நிதர்சனம்.

யாருக்கும் தலைவணங்கி, அடிமையாக வாழ கூடாது என்ற கருத்தினையும் கொண்டிருந்தவராகவே தெரிகிறது. அதுவே பின் நாட்களில் அதிமுக தலைமையின் நாடித்துடிப்பாக மாறிப்போனது பல இன்னல்களில் இருந்து தமிழ்நாட்டு மக்களை காத்திருப்பதற்காகவே என்று நினைக்கிறேன்.

"சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்

ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை

அவர் எப்போதும் வால் பிடிப்பார்"

என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரரான கவிஞர் வாலியே அதிமுக கட்சியினரின் எதிர்காலத்தை துல்லியமாக கணித்தவர் என்ற பெருமை அடைகிறார்.

வளரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல் போதனைகள் வழங்கும் விதமாக பின்வரும் வரிகள் அமைகின்றன.

"தவறு என்பது

தவறி செய்வது

தப்பு என்பது

தெரிந்து செய்வது

தவறு செய்தவன்

திருந்த பார்க்கணும்

தப்பு செய்தவன்

வருந்தி ஆகணும்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி"

தமிழ் திரைப்பாடல் வரிகள் எவ்வளவோ உடைந்து தேய்ந்து கொண்டிருக்கும் இந்நாளில் அதை காக்கும் பொருட்டு பின்வரும் வரிகள் அமைகின்றன.

"விழி போல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும் (2)

தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் (2)

ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் (2)

தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்"

"ஒய் திஸ் கொலவெறி" போன்ற பாடலை மிகப்பெரிய ஹிட் பாடலாக ஆக்கிய தமிழ் சமூகத்தினர் மேற்கூறிய பாடல் வரிகளை படித்து உணர்ந்தால் நல்லது. காலம் ஒரு சக்கரம் போன்றது. அன்றைய பாடல்கள் வரிகளுக்காகவே பெயர் பெற்றது. அதற்கு நேர் எதிராக சென்று கொண்டிருக்கும் இன்று மீண்டும் வரிகளுக்காக சிறப்புறும் என்று எதிர்பார்ப்போமாக.

"எவ்வளவோ பாத்துட்டோம் இதை பண்ண மாட்டோமா?" என்கிற வசனத்தின் பாடல் வடிவம்தான் பின்வரும் வரிகள். இக்கட்டான சூழலில் பலர் நமக்கு தொல்லை கொடுத்தால் இந்த பாடலை பலமுறை கேட்டு தெளிவு பெறலாம்.

"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளி வரும் தயங்காதே

தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே"

"பின்னாலே தெரிவது அடிச்சுவடு

முன்னாலே இருப்பது அவன் வீடு (2)

நடுவினிலே நீ விளையாடு

நல்லதை நினைத்தே போராடு" (2)

பின்வரும் வரிகள் எதற்காக நாம் உண்மையாக பயப்பட வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறுகிறது.

"மனதுக்கு மட்டும் பயந்துவிடு

மானத்தை உடலில் கலந்துவிடு (2)

இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு

இரண்டினில் ஒன்று பார்த்துவிடு" (2)

எம்ஜிஆருக்கு தமிழ் திரையுலகம் அளித்த சலுகையை போன்று ரஜினிகாந்துக்கும் அளித்தது. பொது மக்களின் நெருக்கமான மனிதர்களான கூலித்தொழிலாளி, பால்காரன், கார் டிரைவர் போன்ற வேடங்களை ரஜினிகாந்துக்கு அளித்து அழகு பார்த்தது. எம்.ஜி.ஆருக்கும் ரஜினிகாந்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் முன்னவர் தன் அரசியல் கொள்கைகளை வலுவாக வகுத்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் கதாபாத்திரங்களின் தன்மையை அமைத்துக் கொண்டார். பின்னவரோ எதற்காக தான் இந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தோம் என்பதை உணராமல் நடித்ததனால் எந்த ஒரு கொள்கை பிடிப்பும் இல்லாமல் அரசியல் கனவில் சுணங்கிப் போனார்.

தலைமுறை இடைவெளி என்று சொல்வார்கள். ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் ஒரு முறை ஒரு தலைமுறையை கடந்து செல்கிறோம். தலைமுறை இடைவெளியில் சிக்கித் தவிக்கும் பல பேருக்கு பின்வரும் வரிகள் ஆறுதலாக அமைகிறது.

"பொய்யான

சிலபேர்க்கு

புது நாகரீகம்

புரியாத

பலபேர்க்கு

இது நாகரீகம்

முறையாக

வாழ்வோர்க்கு

எது நாகரீகம்

முன்னோர்கள்

சொன்னார்கள்

அது நாகரீகம்

முன்னோர்கள்

சொன்னார்கள்

அது நாகரீகம்

கண் போன

போக்கிலே

கால் போகலாமா

கால் போன

போக்கிலே

மனம்

போகலாமா? "

நன்றி வணக்கம்.

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 7

1. கிரேட் ஜிம்பாப்வே Ruins-இன் ஒரு பகுதியான கிரேட் Enclosure என்ற இடம் மன்னர் மற்றும் அவரது குடும்பம் வாழ்ந்த இடமாகும். வெளிப்புற மதில் சுவரின் உயரம் 32 அடி, கிரானைட் கற்களால் கட்டப்பட்டது, எங்குமே காரைப்பூசி இருக்க மாட்டார்கள். ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைத்தார் போல் கட்டப்பட்டிருக்கும். Hill Complex பிறகு கட்டப்பட்ட கட்டிடம் என்று தொல்பொருள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. 12 முதல் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கணிக்கபடுகிறது.

2. 15 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு மக்கள் தொகை பெருக்கத்தினால் கனிம வளங்களின் சுரண்டல்கள் அதிகமாகி நாளடைவில் அவை தீர்ந்து போனதால் பெருவணிகம் தடைப்பட்டு கிரேட் ஜிம்பாப்வேயில் வாழ்ந்த மக்கள் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்து விட்டதாக நம்பப்படுகிறது. மெக்சிகோவில் உள்ள மாயன் சமூகத்தினரும் இதே போன்று படிப்படியாக அவர்களது மக்கள் தொகையும் ஒரு காலகட்டத்திற்கு மேல் குறைந்துள்ளது. Zimbabwe 1980 இல் சுதந்திரம் பெற்ற பிறகு அரசு இந்த இடத்தை கையகப்படுத்தி பல்வேறு சீரமைப்பு பணிகள் இன்று வரையிலும் நடத்தி வருகிறது.

3. Valley காம்ப்ளக்ஸில் 13 லிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை அதிகபட்சமாக 10 ஆயிரம் மக்கள் வாழ்ந்துள்ளனர்.

4. Great Zimbabwe Ruins-இல் கிடைக்கப்பெற்ற அரிய வகை பொருட்களை தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைத்துள்ளனர். பொதுமக்களுக்கு புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

5. கிரேட் ஜிம்பாப்வேயின் கிழக்கு இடிபாடுகளில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில், முஜேஜே (Mujejeje) என்று அழைக்கப்படும் இயற்கையான Quartz கனிமங்களை கொண்ட நிலப்பரப்பு, Granite கட்டிடங்களின் காலடியில் உள்ளது. இவ்வாறாக இயற்கையாக அமைந்த நிலம், கிரேட் ஜிம்பாப்வேயின் புனித தளத்தின் ஆன்மீக நுழைவாயிலாக செயல்படுகிறது.

6. இன்றுவரை, நாட்டில் மொத்தம் ஐந்து இடங்கள் உலக பாரம்பரிய பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளன. Mana Pools (1984), கிரேட் ஜிம்பாப்வே (1986), Khami (1986), விக்டோரியா நீர்வீழ்ச்சி (1989) மற்றும் Matopo (2003). மதிப்புமிக்க உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெறுவதற்கான காத்திருப்பு பட்டியலில் Ziwa National Monument-ம் உள்ளது.

7. கிரேட் ஜிம்பாப்வே இடத்தில் வாழ்ந்த பழங்குடியினரான சோனா மக்களின் ஒரு பிரிவான கரங்கா மக்களின் கிராமம் அருகில் உள்ளது. கால்நடை வளர்ப்பு அவர்களது பிரதான தொழிலாக அமைந்துள்ளது. கால்நடையை பாலுக்காகவும் உணவுக்காகவும் பயன்படுத்துகின்றனர். விவசாயமும் அவர்களது பிரதான தொழிலாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து உயர்வான இடத்தில் இருப்பதனால் கேரட் மற்றும் முட்டைகோஸ் பயிரிடுகின்றனர். உணவுக்காக நாட்டு கோழியும் பிராய்லர் கோழியும் வளர்க்கப்படுகிறது. சோனா மக்களின் கிராமத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஓரிரு நாட்கள் தங்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆப்பிரிக்காவின் கிராம சூழலை அனுபவிக்க இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.

8. ஆப்பிரிக்காவின் Big Five விலங்குகளான காண்டாமிருகம், சிங்கம், சிறுத்தை, யானை மற்றும் காட்டெருமை ஆகும்.

9. சோனா மக்களின் கிராமத்தில் உள்ள வீடுகள் செம்மண்ணால் கட்டப்பட்டவை மேற்கூரை காய்ந்த புற்களினால் நெய்யப்பட்டவை. கிரேட் ஜிம்பாப்வேயில் வாழ்ந்த பழங்குடியினரான கரங்கா மக்கள் பெரும்பாலும் மஸ்விங்கோ மற்றும் வெவ்வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வாழ்கின்றனர்.

10. பல்வேறு வேலைப்பாடுகள் நிறைந்த கூடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை நெய்வதே கரங்கா மக்களின் முக்கிய விவசாயமாக உள்ளது. பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்ட மண்பானைகளை தான் சமைப்பதற்கு உபயோகப்படுத்துகின்றனர்.

11. சோனா பழங்குடியினரின் ஒவ்வொரு ஆணும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். ஒவ்வொரு மனைவிக்கும் தனித்தனியே வீடு அமைத்துள்ளனர். ஐந்தாவது மனைவியின் வீடு சிறியதாக இருக்கும் மற்றும் அதில் உள்ள பாத்திரங்களும் எண்ணிக்கை அளவில் குறைந்ததாகவே இருந்தாலும் ஐந்தாவது மனைவி தான் அவரது விருப்பமான மனைவி என்ற குறியீடும் அவர்களிடையே இருந்துள்ளது. அதாவது முதல் தார மனைவிக்கு பெரிய அளவிலான வீடும் அதற்கு அடுத்து வரும் மனைவிக்கு அதைவிட சிறிய அளவிலான வீடும் வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த மனைவிக்கு வீட்டின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. வீட்டின் அளவும் பாத்திரங்களும் குறைந்தாலும் அண்மையில் திருமணம் செய்த மனைவியைத்தான் அவரது விருப்ப மனைவியாக இருந்துள்ளார்.

12. பண்டைய கால தமிழ் மக்களின் கலாச்சாரமும் சோனா மக்களின் கலாச்சாரமும் பல்வேறு விதங்களில் ஒத்துப் போகிறது. சோனா மக்கள் தனி ஒரு சமூகமாக வாழ்கிறார்கள் அவர்களுக்கென பொதுவான ஒரு வங்கிக் கணக்கை தொடங்கி அவர்களது தேவைக்கு அந்த பொதுவான வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

13. Great ஜிம்பாப்வே, ஜிம்பாப்வே நாட்டின் தேசிய சின்னமாக 1937-இல் அறிவிக்கப்பட்டுள்ளது. 1980ல் இதன் பெயரே நாட்டின் பெயராக மாற்றப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய தளமாக 1986இல் ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

.

14. முதிர் கவி எரி (Mutrikwi Lake): 'முதிர்ந்த கவிஞர்' என்ற தமிழ் பெயரே நாளடைவில் முதிர் கவி என்று மருவியுள்ளது என்று நினைக்கிறேன். 1960 இல் ஆங்கிலேயர்கள் தெற்கு ஆப்பிரிக்காவில் ஆட்சி செய்த போது முதிர் கவி ஏரியை ஒட்டிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி என்றாலும் பல்வேறு ஆறுகள் இயற்கையாக இந்த ஏரியில் இணைகிறது உதாரணத்திற்கு முதிர் கவி ஆறு மற்றும் Popoteke ஆறு போன்றவை. ஆங்கிலேயர்கள் விவசாயத்திற்காக இந்த தடுப்பணையை கட்டியுள்ளார்கள். இந்த தடுப்பனையின் பெயர் Kyle அணை. Scotland நாட்டை சேர்ந்தவர் தான் இந்த அணையை கட்டினார். அவருடைய சொந்த ஊரான ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு முக்கிய நகரத்தின் பெயரை இந்த அணையின் பெயராக சூட்டியுள்ளார். மஸ்விங்கோ நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கிரேட் ஜிம்பாப்வே Ruins.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 6

1. ஜிம்பாப்வே மக்களிடையே ஒரு வினோத பழக்கம் உள்ளது, புது நபரை கண்டால் அவரது whatsapp நம்பரை பெற்று அவர்களுக்கு அவ்வப்போது காலை வணக்கம், மாலை வணக்கம் போன்ற வணக்கங்களைத் தெரிவித்து நலம் விசாரிக்கும் பழக்கம் வெகுவாக உள்ளது.

2. ஜிம்பாப்வே மக்கள் தாராளமாக மூன்று நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள்.

3. பொது போக்குவரத்து கிடையாததால் தனியார் வாகனங்களை (Shared Van) கொண்டு மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்கிறார்கள்.

4. ஜிம்பாப்வேயில் அரசு நடத்தும் பள்ளிக்கு மூன்று மாத கட்டணமாக 30 முதல் 50 டாலர் வரை கட்டணமாக செலுத்துகின்றனர். கட்டட பராமரிப்பு செலவுக்காகவும் பொது சுகாதாரத்திற்காகவும் அரசு அப்பணத்தை உபயோகப்படுத்துகிறது.

5. பெரும்பாலானோர் 100 முதல் 150 டாலர்கள் வரை சம்பாதிக்கிறார்கள். அச்சிறு தொகையைக் கொண்டு அவர்களது வாழ்க்கை மிகவும் கடினமாகத்தான் செல்கிறது. ஏனெனில் பொதுப் போக்குவரத்தில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணமே ஒரு டாலர் செலவாகிறது.

6. சோனா மக்கள் ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து கிரேட் ஜிம்பாப்வே பகுதியில் வசிக்கிறார்கள். பதினோராம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை Great Zimbabwe சாம்ராஜ்யம் நடைபெற்றது. அந்த காலத்தில் பெரு வணிக வணிகர்கள் இந்திய நாட்டில் இருந்தும் அரேபியா நாட்டில் இருந்தும் ஜிம்பாப்வே சோனா மக்களிடம் வணிகம் புரிந்ததற்கான சான்றுகள் உள்ளன. தங்கச் சுரங்கங்கள் அதிகமாக இருந்ததனால் இந்தப் பகுதி செல்வ செழிப்பாக அந்த காலத்தில் இருந்துள்ளது.

7. கிரேட் Zimbabwe Ruins மூன்று விதமாக பிரிக்கலாம் ஒன்று Hill Complex உயரமான மலைகளில் உள்ள கட்டிடங்கள். இரண்டாவது, கிரேட் Enclosure தரைமட்டத்திலேயே ஒரு வட்ட வடிவிலான கட்டிடங்களைக் கொண்டது. மூன்றாவதாக Valley காம்ப்ளக்ஸ் நிலத்தடியில் இருந்து கொஞ்சம் தாழ்வான பகுதியில் உள்ள கட்டிடங்கள் என்று நம்பப்படுகிறது.

8. Hill Complex தான் முதன் முதலில் கட்டப்பட்ட கட்டிடம் என்று நம்பப்படுகிறது. 1890 இல் ஜிம்பாப்வேயை ஆங்கிலேயர்கள் கைப்பற்றுகிறார்கள். கைப்பற்றிய அந்த காலத்தில் பல தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நடைபெறுகிறது. அப்போதுதான் கிரேட் Zimbabwe Ruins-ஐ கண்டுபிடிக்கிறார்கள். அதாவது 13 இல் இருந்து 15 நூற்றாண்டு வரை வாழ்ந்த மக்களின் கலாச்சாரம், நாகரீகம், கட்டிடக்கலை போன்றவற்றை அறிகிறார்கள்.

9. ஜிம்பாப்வே என்றால் கற்களால் ஆன வீடு என்று பொருள்படும். அதாவது House of stones. சிதலமாடைந்த கிரேட் ஜிம்பாப்வே இடத்திலுள்ள உள்ள கற்கள் எல்லாம் கிரானைட் கற்கள்.

10. அகழ்வாராய்ச்சியின் முடிவில் Rhodesia என்ற பெயரை ஜிம்பாப்வே என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

11. பொதுவாக ஜிம்பாப்வேவிற்கு சுற்றுலாப் பயணிகள் அவ்வளவாக வருவதில்லை. அண்டை நாடான தென்னாப்பிரிக்காவிற்கும் சாம்பியாவிற்கும் வரும் சுற்றுலாப் பயணிகளை விட மிகக் குறைவான பயணிகளே ஜிம்பாப்வேவிற்கு வருகை தருகின்றனர்.

12. ஆங்கிலேயர்கள் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் முடிவை மறைப்பதற்காக அதாவது சோனா மக்கள் தான் இந்த இடத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை மறைக்க முற்பட்டனர். இதை அறிந்த ஜிம்பாப்வேயின் பூர்வக்குடி மக்களான சோனா மக்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்ற சுதந்திரத்திற்கு பிறகு தங்கள் நாட்டின் பெயரை Rhodesia என்று இருந்ததை ஜிம்பாப்வே (House of Stones) என்று தங்களது தாய் மொழியில் பொருத்தமான பெயரை சூட்டிக் கொண்டனர்.

13. கிரேட் Zimbabwe Ruins பகுதிக்கு அருகாமையில் ஒரு பெரிய ஏரி உள்ளது அதன் பெயர் முதிர்க்வி எரி. செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி. தெற்கு ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய ஏரி இதுதான். நிறைய ஆறுகள் இந்த ஏரியில் இணைகிறது. பொப்பிடிக் ஆறும் இந்த ஏரியில் தான் கலக்கிறது. அருகில் ஒரு அணையும் கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் விவசாயத்திற்காக உபயோகப்படுத்திக் கொண்டனர். ஆங்கிலேயர் காலத்தில் Lake Kyle என்று இருந்த பெயர் ஜிம்பாப்வேயின் சுதந்திரத்திற்கு பிறகு Lake Mutirikwi முதிர்க்வி என்று மாற்றியுள்ளனர். ஏரிக்கு அருகில் பொழுதுபோக்கு பூங்காவை உருவாக்கியுள்ளனர். அருகில் உள்ள காடுகளில் இருந்து விலங்குகள் ஏரிக்கு வந்து தண்ணீருக்காக வருகை தருகின்றது. சிறுத்தை, ஒட்டகசிவிங்கி, வரிக்குதிரை, மான்கள் போன்ற விலங்குகள் அருகில் இருக்கும் காடுகளில் வாழ்கின்றன.

14. ஜிம்பாப்வே நாட்டின் கொடியிலேயே ஆப்பிரிக்கப் பருந்தை (Great Zimbabwe Bird) சின்னமாக வைத்திருப்பார்கள். தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த பருந்தை Soapstone என்ற கல்லில் சிற்பமாக வடித்துள்ளனர். அதை அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் (Museum) காணலாம். பழங்கால சோனா மக்கள் பருந்தை கடவுளாக வணங்கியுள்ளனர்.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 5

1. ஜூலை 2024 நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலர் 7.62 ஜிம்பாப்வே கோல்டுக்கு (ZiG) சமம்.

2. A4 என்பது ஜிம்பாப்வேயில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலை, இது R1 நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது, இது Beitbridge மற்றும் Harare இடையே செல்கிறது. பீட்பிரிட்ஜில் இருந்து ஹராரேவை அடையும் முன் Rutenga, Ngundu, Masvingo, Mvuma, Chivhu வழியாக செல்கிறது. Beitbridge என்பது ஜிம்பாப்வேயின் தென்கோடியில் உள்ள நகரம், தென்னாப்பிரிக்காவின் எல்லையில் உள்ளது.

3. மாஸ்விங்கோ என்பது ஜிம்பாப்வே பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டு இருந்த காலனித்துவ காலத்தில் விக்டோரியா கோட்டை என்று அழைக்கப்பட்டது. இது தென்கிழக்கு ஜிம்பாப்வேயில் உள்ள ஒரு நகரம் மற்றும் மாஸ்விங்கோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்த நகரம் கிரேட் ஜிம்பாப்வேக்கு அருகாமையில் அமைந்துள்ளது. கிரேட் ஜிம்பாப்வே என்னும் தேசிய சின்னத்தினால் நாடு அதன் பெயரைப் பெற்றுள்ளது. மற்றும் Mutirikwi முதிரிக்வி ஏரி, அதன் பொழுதுபோக்கு பூங்கா, Kyle கைல் அணை மற்றும் Kyle தேசிய ரிசர்வ் ஆகியவற்றிற்கு அருகில் கிரேட் ஜிம்பாப்வே உள்ளது. ஜிம்பாப்வேயில் உள்ள பல்வேறு Shona பழங்குடியினரின் சந்ததியினரான Karanga மக்கள் பெரும்பான்மையினராக கிரேட் ஜிம்பாப்வேயில் வசிக்கிறார்கள்.

4. Popoteke ஆறு மற்றும் பள்ளத்தாக்கு ஜிம்பாப்வேயின் மாஸ்விங்கோ நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1088 மீட்டர் உயரத்தில் உள்ளது. Popoteke Gorge (பள்ளத்தாக்கு) Mutirikwi (பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் Kyle என்று அழைக்கப்பட்டது) ஏரியின் வடக்கே அமைந்துள்ளது மற்றும் ஏரியின் வடக்குப் பகுதியில் உள்ள Beza மலைத்தொடரின் பிளவுகளுக்கு இடையே நதி ஓடுகிறது. Popoteke ஆற்றின் தெற்கு பகுதியில் உள்ள Mutirikwi ஏரியில் இணைகிறது.

5. மாஸ்விங்கோ, கடல் மட்டத்திலிருந்து 1087.71 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. ஹராரே, கடல் மட்டத்திலிருந்து 1,483 மீட்டர் (4,865 அடி) உயரத்தில் ஒரு பீடபூமியில் அமர்ந்திருக்கிறது. ஹராரேவை Highlands என்றும் Masvingoவை Midlands என்றும் அழைக்கிறார்கள்.

6. Masvingo என்பது வேளாண்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம். பொதுவாக ஜிம்பாப்வேயில் சோளம், கோதுமை, புகையிலை பயிரிடுகிறார்கள். Masvingo சுற்றிலும் கனிம சுரங்கங்கள் பல உள்ளன. முக்கியமாக லித்தியம் சுரங்கம் உள்ளது. சிறிய அளவில் தங்கச் சுரங்கமும் உண்டு. குளிர்காலத்தில் கரும்பு பயிரிடுகிறார்கள். ஜிம்பாப்வேயின் முக்கிய உணவான சோளம் மற்றும் நிலக்கடலை மழைக்காலத்தில் பயிரிடுகிறார்கள்.

7. Mozambique மொசாம்பிக் 2024 இல் தனிநபர் அல்லது ஒரு குடும்பம் வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் ஆப்பிரிக்க நாடாக முன்னிலை வகிக்கிறது. அதிக பணவீக்கம், பொருளாதார உறுதியற்ற தன்மை மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற சவால்களை எதிர்கொள்கிறது. இந்த காரணிகள் அதன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு முக்கிய பங்காற்றுகின்றன.

8. 2024 இல் அதிக வாழ்க்கைச் செலவைக் கொண்ட 10 ஆப்பிரிக்க நாடுகள் முறையே Mozambique, Senegal, Ivory Coast, Ethiopia, Mauritius, Zambia, Cameroon, Zimbabwe, South Africa, Uganda.

9. 2024 இல் குறைந்த வாழ்க்கைச் செலவைக் கொண்ட 10 ஆப்பிரிக்க நாடுகள் முறையே நைஜீரியா, லிபியா, கென்யா, மடகாஸ்கர், ருவாண்டா, தான்சானியா, கானா, எகிப்து, சோமாலியா, துனிசியா

10. Matka Canyon, North Macedonia: Matka மட்கா என்பது ஐரோப்பாவில் உள்ள வடக்கு மாசிடோனியாவின் மத்திய ஸ்கோப்ஜேவிற்கு (Central Skopje) மேற்கே அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். ஏறக்குறைய 5,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட மட்கா, வடக்கு மாசிடோனியாவில் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும், மேலும் இது பல இடைக்கால மடாலயங்களின் தாயகமாகவும் விளங்குகிறது. மட்கா பள்ளத்தாக்கில் உள்ள மட்கா ஏரி மாசிடோனியாலேயே பழமையான செயற்கை ஏரியாகும்.

11. Yumuri பள்ளத்தாக்கு (Canyon), கியூபாவின் பராக்கோவாவிலிருந்து (Baracoa) கிழக்கே 30 கி.மீ தூரத்தில் பயணித்தால், நாட்டின் பலரால் அறியப்படாத இயற்கை அதிசயங்களில் ஒன்றை நீங்கள் காணலாம்: யுமுரி Canyon.

12. Yumuri River Canyon தீவு பல்லுயிர் வாழும் பள்ளத்தாக்கு ஆகும். 220 மீட்டர் ஆழம், சுமார் 200 மீட்டர் உயரமுள்ள சுவர்களால் சூழப்பட்டு மற்றும் உள்நாட்டு நிலப்பரப்பில் சுமார் 4 கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது. பசுமையான இடத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் அழகு பார்வையாளர்களையும் உள்ளூர் மக்களையும் ஈர்க்கும் வண்ணம் உள்ளது, 8.7 சதுர கிலோமீட்டர் காடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள பராகோவா மற்றும் மைசி (Maisi) நகராட்சிகளுக்கு இடையிலான எல்லைகளைக் குறிக்கிறது, பல பறவைகள் மற்றும் நிலநீர்வாழ் உயிரினங்கள் (Amphibians) வாழ்கின்றன.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

"Goat"

தலைப்பு ஆங்கிலத்தில் உள்ளது. ஆங்கிலத்தில் அமைத்தால் வியாபார ரீதியாக உதவும் என்ற நோக்கில் அமைத்துள்ளார்கள். இதன் மூலம் நாயகனின் தமிழ் சமூகத்தின் மீதுள்ள அக்கறையும் மொழிப் பற்றும் நன்றாக விளங்குகிறது.

கால்பந்து வீரர் மெஸ்ஸி அவர்களை போற்றும் விதமாக இந்த Goat என்ற அடைமொழி உலகப் பிரபலமானது. கால்பந்தாட்டத்தை விளையாடினால் ஏழு சதவிகிதம் நம் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் டென்னிஸ் விளையாட்டை தீவிரமாக விளையாடினால் பத்து சதவிகிதம் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம். இம்மாதிரியான விளையாட்டுகளை விளையாடுபவர்கள் யாவரும் கடும் உடல் உழைப்பை முன்னிறுத்தி பல திறமையாளர்களின் சவால்களை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடிய பின்னரே இவ்வாறான கௌரவ பட்டம் வழங்கப்படுகிறது.

நீலச்சட்டை மாறன் கூறியது போல தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் தோண்டி எடுத்ததைப் போல முன்னொரு காலத்தில் தமிழ் திரை உலகில் ஜொலித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களை தூசு தட்டி உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பி நடிக்க வைத்திருப்பது Oldest of All Time என்ற பெயரே படத்திற்கு நெருக்கமான பெயராக இருக்கும்.

இயக்குனராக வெங்கட பிரபு வழக்கம் போல ஜெயித்திருக்கிறார். இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும் தன்னுடைய கம்பீரத்தை விட்டுக் கொடுக்காது ஆங்காங்கே ஜொலிக்கிறார். இதுவே நாயகனின் கடைசி படம் என்று வருத்தப்படுபவோருக்கு இனி வாழ்நாள் முழுவதும் பொது வாழ்க்கையில் அவரது நடிப்புப்பயணம் தொடரும் என்ற பேருவகையை அளித்திருப்பது நடிகர் விஜய்யின் வெற்றி அமைகிறது.

அந்த காலத்தில் பெரிய கமல் பிடிக்குமா குட்டி கமல் பிடிக்குமா என்று அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்த பிறகு கேட்கப்பட்ட கேள்விக்கு குட்டி கமல் என்று பதிலளித்த எனக்கு இப்படத்தைப் பார்த்த பிறகு பெரும் வியப்பு காத்திருந்தது. அதே கேள்வியை என் மகனிடம் கேட்ட பொழுது வந்த பதில் இது தான். "எனக்கு சஞ்சய் தான் பிடித்திருந்தது. அப்பா எல்லாம் ஓல்ட், சஞ்சய் தான் சூப்பர்".

வரலாறு தொடர்கிறது.

நன்றி வணக்கம்.

#பார்த்த_திரைப்படத்தில்_உணர்ந்தவை

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 4

1. ஜிம்பாப்வே பத்து நிர்வாக மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: புலவாயோ, ஹராரே, மணிக்கலாண்ட், மஷோனாலண்ட் சென்ட்ரல், மஷோனாலாந்து கிழக்கு, மஷோனாலண்ட் மேற்கு, மாஸ்விங்கோ, மாடபெலேலேண்ட் வடக்கு, மாடபெலேலேண்ட் தெற்கு மற்றும் மிட்லாண்ட்ஸ்.

2. ஜிம்பாவேயின் முக்கிய நகரங்கள் Harare மற்றும் புலவாயோ. புலவாயோவில் Ndbele இன மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். ஹராரேவில் சோனா இன மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.

3. ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள எந்தவொரு பயணியும், கற்சிற்பங்கள், மர வேலைப்பாடுகள், Balancing Rocks ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பார்க்காமல் திரும்புவது உண்மையான ஜிம்பாப்வே அனுபவமாக கருத முடியாது. ஹராரேயில் இருந்து தென்கிழக்கே 13 கிமீ தொலைவில், Chiremba சாலையில் Chiremba Balancing Rocks அமைந்துள்ளது. Balancing Rocks பார்ப்பதற்கு மிகவும் பிரமிக்க வைக்கின்றன. ராட்சத பாறைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் அவை அழகான இயற்கை கலைப் படைப்புகளாக விளங்குகின்றன.

4. Chiremba பகுதியில் உள்ள Money Rock என்றழைக்கப்படும் Balancing Rock ஜிம்பாப்வே நாட்டின் நூறு டிரில்லியன் பணத்தாளின் படமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே நாட்டின் நூறு ட்ரில்லியன் பணத்தாள் தான் உலகிலேயே அதிக மதிப்பிலான பணத்தாள் என்ற பெருமை பெறுகிறது. Balancing Rock என்பது அமைதியையும் பொறுமையையும் நிலைத்தன்மையையும் வலியுறுத்தும் சின்னமாக விளங்குகிறது.

5. பூமிக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து அதனால் உருவான பாறை குழம்புகள் நாளடைவில் அதாவது மில்லியன் வருடக் கணக்கான கால இடைவெளியில் பாறைகளாக உருமாறி உள்ளன. காலப்போக்கில் பாறை அரிப்பு காரணமாக ஒன்றன் மீது ஒன்றாக வைத்தது போல் காட்சி அளிக்கும் படி இயற்கையாகவே அமைந்துள்ளது.

6. San பழங்குடியினர் தென்னாப்பிரிக்காவின் பழமையான குடிமக்களின் வழித்தோன்றல்கள், பூமியில் உள்ள பழமையான கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள். San என்ற சொல் தென்னாப்பிரிக்காவில் உள்ள பல பழங்குடி இனக்குழுக்களுக்கான கூட்டுச் சொல்லாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்த குழுக்களில், எடுத்துக்காட்டாக, ǃKung, |Gui, Ju/'hoasi அல்லது Naro Tribe ஆகியவை அடங்கும். டிஎன்ஏ சோதனை மூலமாக சான் மக்கள் தான் முதல் ஹோமோ சேபியன்களின் நேரடி வழித்தோன்றல்கள் என்பதை நிரூபிக்கிறது.

7. Rock Art, சான் மக்களின் வரலாற்றையும், அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை விளக்கும் விதமாக உள்ளது. சான் மக்கள் அவர்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பதிவு செய்ய பாறை ஓவியக் கலையைப் பயன்படுத்தினர்.

8. 2008இல் ஜிம்பாப்வேயின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றது. ஒரு டிரில்லியன் முதல் 100 ட்ரில்லியன் வரை பணத்தாள்கள் அச்சடிக்கப்பட்டன. தினந்தோறும் பொருட்களின் விலை மாறிக்கொண்டே இருந்தது.

9. லான்காஸ்டர் ஹவுஸ் ஒப்பந்தம் என்பது 21 டிசம்பர் 1979 அன்று லான்காஸ்டர் ஹவுஸில் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தைக் குறிக்கிறது, ஒரு அரசியலமைப்பு மாநாட்டின் முடிவில் பல்வேறு கட்சிகள் ரோடீசியாவின் எதிர்காலம் பற்றி விவாதித்ததைத் தொடர்ந்து (ஜிம்பாப்வே முன்பு ரோடீசியா என்று அழைக்கப்பட்டது) இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் விளைவாக ரோடீசியன் புஷ் போரை திறம்பட முடித்து வைக்கப்பட்டது. இது 1964 இல் அடைந்த ரோடீசியாவின் ஒருதலைப்பட்ச சுதந்திரப் பிரகடனத்தை ரத்து செய்ததைக் குறித்தது மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரம் ஒரு இடைக்கால காலத்திற்கு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்ததன் காரணமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மேற்பார்வையில் சுதந்திரமான தேர்தல்கள் நடைபெற்றது.

10. 1980களில் ஜிம்பாப்வே சுதந்திரம் அடைந்த பிறகு Lancaster ஒப்பந்தத்தின் படி வெள்ளையர்களிடம் இருந்து கருப்பர்கள் நிலத்தை வாங்க உரிமை இருந்தாலும் வெள்ளையர்கள் அவர்களுக்கு நிலத்தை விற்க விரும்பவில்லை. 2000தில் Mugabe அரசு வெள்ளையர்களிடம் இருந்து நிலத்தை அடாவடியாக பிடுங்கி கருப்பர்களுக்கு கொடுத்ததன் விளைவாக இப்போது ஜிம்பாவேயில் உள்ள கருப்பர்கள் பயனடைய தொடங்கி இருக்கிறார்கள். அந்தத் திட்டம் தோல்வி அடைந்திருந்தாலும் அதில் பெரும் ஊழல் நடந்திருந்தாலும் அதனுடைய தாக்கம் நீண்டகால அடிப்படையில் கருப்பர்களுக்கு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.

11. 2000-இல் மூகாம்பே அரசின் நில சீர்திருத்தத் திட்டம் தோல்வி அடைந்ததற்கான காரணம் நிலத்தை பராமரிக்க போதுமான அறிவும் தொழில்நுட்ப வளர்ச்சியும் சாமானியர்களான கருப்பர்களுக்கு இல்லாத காரணத்தால் விவசாயம் பெருமளவு வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனது. நிலத்தை வன்முறையின் மூலம் வெள்ளையர்களிடமிருந்து பிடுங்கி கருப்பினத்தவர்களுக்கு வழங்கியதை எதிர்த்து அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஜிம்பாப்வே அரசின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்ததும் அந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாய் அமைந்தது.

12. ஜிம்பாப்வேயில் பணப்பரிமாற்றத்திற்காக உலகில் உள்ள முக்கிய பணத்தாள்களான டாலர், யூரோ, தென் ஆப்பிரிக்கா கரன்சியான Rands போன்றவை உபயோகப்படுத்தலாம். மக்கள் பெரும்பாலும் அமெரிக்கா டாலர்களையே பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

13. ஜிம்பாப்வேயின் இரண்டாவது பெரிய நகரமான புலவாயோவில் சவுத் ஆப்பிரிக்காவின் பணமான (Rands) ராண்ட்சை அதிக அளவில் பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்துகின்றனர். ஹராரேவில் பெரும்பாலும் அமெரிக்க டாலர்களை பயன்படுத்துகின்றனர். புலவாயோவில் சில்லறை காசுகளும் பயன்பாட்டில் உள்ளது.

14. 1,200 மீ உயரமுள்ள உள்நாட்டு பீடபூமி நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

15. Mukuvisi Woodlands ஜிம்பாப்வேயின் தேசிய பொக்கிஷங்களில் ஒன்றாகும். ஹராரேயில் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் சில பெரிய பசுமையான இடங்களுள் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் 18,000 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வருகை தருகின்றனர். சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்காவை போன்று உள்ளது.

16. பிப்ரவரி 2023 இல் நடைபெற்ற ஜிம்பாப்வே சுற்றுலா ஆணையத்தின் துவலம்பா தேசிய சுற்றுலா மற்றும் சுற்றுலா விருதுகள் 2022 இல், அந்த ஆண்டின் சுற்றுச்சூழல் சுற்றுலா வசதிக்கான விருதை வென்றதில் Mukuvisi Woodlands பெருமிதம் கொள்கிறது.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Text Example

எல்லாம் ஜிம்பாப்வே பற்றியது பாகம் 3

1. ஜிம்பாப்வே தற்போது மோசமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதற்கான காரணங்கள். ராபர்ட் முகாம்பின் ஆட்சி காலத்தில் 2000 இல் நாட்டில் சிறுபான்மையினராக வாழும் வெள்ளையர்களிடம் இருந்த நிலங்களை கறுப்பின மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. முகாம்பின் கட்சியினரே தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு பொது மக்களுக்கு சரியான முறையில் பகிர்ந்து அளிக்காததாலும் வெள்ளையர்களிடமிருந்து அடாவடியாக நிலத்தை பிடுங்கிய காரணத்தினால் வெகுண்டெழுந்த மேற்குலகத்தினரான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்ததாலும் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. 1990களில் உச்சமாக இருந்த எய்ட்ஸ் தெற்கு ஆப்பிரிக்கா பகுதியில் இருந்துதான் உருவானது. மேலும் இரண்டாயிரத்தில் காலரா என்னும் நோயும் இங்கு பரவலாக மக்களை கொன்று குவித்தது. அரசின் மோசமான நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரமற்ற வாழ்க்கை முறையினால் மக்களிடையே அதிக அளவில் உயிரைக் கொல்லும் நோய் பரவியதாலும் பொருளாதாரம் 2008இல் அதல பாதாளத்திற்கு சென்றது. அதன் பிறகே வேறு வழியின்றி அமெரிக்க டாலரை உபயோகப்படுத்த தொடங்கினர்.

2. தற்போது வெள்ளை இன மக்கள் சிறுபான்மையினராகத்தான் நாட்டில் இருக்கிறார்கள். ஒரு சதவிகிதத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலான வெள்ள இன மக்கள் இங்கிலாந்து நாட்டிற்கே சென்று விட்டார்கள். மேலும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் குடி பெயர்ந்து விட்டனர்.

3. ஜிம்பாப்வேயின் பருவ காலங்கள்: மழைக்காலம் நவம்பர் முதல் ஏப்ரல் வரை இருக்கும். அந்த காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஜூன் முதல் அக்டோபர் வரை குளிர்காலமாக இருக்கிறது. மழை அறவே பெய்யாது. பகலில் 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது, இரவில் ஐந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது. இந்த காலத்தில் தான் தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளை அதிக அளவில் பார்க்க முடியும். ஏனெனில் மழை பொழியாத காரணத்தினால் தண்ணீரைத் தேடி விலங்குகள் அலைவதால் அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிவதாக கருதுகிறார்கள்.

4. Mopane woods என்பது பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட மற்றும் கவனிக்கப்படாத ஆப்பிரிக்காவின் வன்மையான மரமாகும் (Hardwood), அதன் அடர்த்தி மற்றும் ஆயுள் மற்ற மரங்களை காட்டிலும் சிறப்பானது. Mopane மரங்கள் சிறந்த ஒலியியல் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, இது ஆப்பிரிக்க பிளாக்வுட்டுடன் ஒப்பிடப்படுகிறது. ஆனால் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது.

5. Hwange ஹ்வாங்கே தேசிய பூங்கா மேற்கு ஜிம்பாப்வேயில் உள்ளது. அதன் புல்வெளிகள் மற்றும் மொப்பேன் காடுகளில் பெரிய யானைக் கூட்டங்கள், சிங்கங்கள் மற்றும் ஆப்பிரிக்க காட்டு நாய்கள் உள்ளன. தெற்கு லுவாங்வா (South Luangwa) தேசிய பூங்கா கிழக்கு ஜாம்பியாவின் லுவாங்வா (Luangwa) நதி பள்ளத்தாக்கில் உள்ளது. இது ஏராளமான வனவிலங்குகளுக்கு பெயர் பெற்றது.

6. ஜிம்பாப்வேயின் பாரம்பரிய உணவான Sadza என்பது முக்கிய விவசாயப் பயிரான வெள்ளை சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு முக்கிய உணவாகும். சோள மாவை தண்ணீருடன் கலந்து, கெட்டியான, மென்மையான நிலைத்தன்மையை அடையும் வரை சமைக்கிறார்கள். சோளத்தால் செய்யப்பட்ட உப்புமா என்று நாம் அழைக்கலாம்.

7. Kopje கோப்ஜே மலை - ஹராரேவில் உள்ள 300 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட வட்ட வடிவிலான மலையாகும். ஹராரே நகரத்தை கழுகு பார்வை பார்க்க உகந்த இடமாகும்.

8. Nehanda Nyakasikana நேஹந்தா நயகாசிகானா என்ற பெண் சோனா இனத்தை சார்ந்த ஆவி ஊடகம் (spirit medium) ஆவார். ஆவி ஊடகம் என்றால் தம் மீது இன்னொருவரின் ஆவி இருப்பதாக கருதப்படுவது. 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை வழி நடத்தினார். அவரை ஆட்கொண்டிருந்த ஆவியிலிருந்து பெயரைப் பெற்றதாக நம்பப்படுகிறது, அது மக்களிடையே பெரிய அந்தஸ்தைக் கொடுத்தது. ஷோனா மக்களின் ஆன்மீக, அரசியல் மற்றும் இராணுவத் தலைவராக இருந்தார். ஆங்கிலேயர்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டபோதும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்துவிட்டார், இறந்தபின் அவருடைய எலும்புகளும் எழுந்து சண்டையைத் தொடரும் என்று உறுதியளித்தார்.

9. ராபர்ட் முகாபேவுக்கு எதிராக குரல் கொடுத்தத்தினால் தான் ஹென்ரி ஓலாங்கா கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பிரிட்டன் தப்பி ஓடினார் என்ற செய்தியும் இருக்கிறது.

10. ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் ஒன்றியம் (ZAPU) ஒரு ஜிம்பாப்வே அரசியல் கட்சி. இது ஒரு போர்க்குணமிக்க கம்யூனிஸ்ட் அமைப்பு மற்றும் அரசியல் கட்சி, 1961 இல் நிறுவப்பட்டது முதல் 1980 வரை ரோடீசியாவில் பெரும்பான்மை ஆட்சிக்காக பிரச்சாரம் செய்தது. 1987 இல், அது ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய யூனியன்-தேசபக்தி முன்னணியுடன் (ZANU - PF) இணைந்தது. தற்போதைய அதிபரான எமர்சன் மனாங்குவா மற்றும் முன்னாள் அதிபரான ராபர்ட் முகாம்பே ZAPU கட்சியினை சேர்ந்தவர்கள் தான்.

#உலக_நாடுகளை_பற்றி_அறிந்து_கொள்வோம்

Locations of visitors to this page